வியாழன், 23 ஜூலை, 2015
லேபிள்கள்:
தர்மபுரி கலவரம்,
ஜாதி,
ஜாதிவெறி,
jathi,
jathiveri,
ramadass,
sathi,
tamilthesiyam
தமிழ் கடவுள் முருகன் என்றால்
தமிழ் கடவுளின் துணைவியாரும் தமிழ் பெண் கடவுள்தானே...?
பழனி போகும் அரோகரா கூட்டம்
போகும் வழியில் இந்த கதைகளையும் படித்து செல்லுங்கள்
வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டு இருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் பிரபலமானது. சமிஸ்கிருத நூல்களில் ஸ்கந்தனைப் பற்றிக் கூறும்போது அவரை ஒரு பிரும்மச்சாரி அல்லது தேவக் கடவுளான தேவசேனாவை (தெய்வானை) மணந்தவர் என்று மட்டுமே கூறுகின்றது. அதற்கு மாறாக பல தமிழ் நூல்களில் வள்ளியே முருகனின் கணவர் என்று கூறி வந்துள்ளது.
இது பல காலமாக திராவிடர்களினால் நம்பப்பட்டு வந்தக் கதை ஆகும். பண்டைய இன தமிழ் மக்கள் இதுதான் உண்மை என நம்புவதற்குக் காரணம் 1350 ஆம் ஆண்டில் காஞ்சீபுரத்தில் இயற்றியதாகக் கூறப்படும் குச்சியப்பா என்பவர் எழுதி உள்ள கந்த புராணத்தின் 267 செய்யுளில் காணப்படும் கடைசி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலம் என்பதே. அது என்ன?
தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை. அந்த மலையின் அடிவாரத்தில்தான் நம்பி என்ற வேடன் இருந்தான். அவனுக்குப் பிறந்த அனைத்துக் குழைந்தைகளுமே ஆண் குழந்தைகளாக இருந்தன. அதனால் அவன் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருந்தான். அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி எனும் துறவி இருந்தார். ஒருநாள் அவர் எதிரில் அழகான அரபு தேசத்து மான் ஒன்று ஓடியது. அதன் உடல் அழகைக் கண்டு காம இச்சைக் கொண்டு அவர் அதைப் பார்க்க, துறவி பார்த்த காமக்கண்ணினால் அந்த மான் கர்ப்பம் அடைந்தது ( துறவிகள் பார்வை மூலமே காமத்தை செலுத்த முடியும் என்பது ஒரு நம்பிக்கை.
நமது இதிகாசங்களில் பல சம்பவங்கள் அவ்வாறு உள்ளன. இது என்னுடைய செய்தி - சாந்திப்பிரியா). இவ்வாறாக கர்ப்பம் அடைந்த மான் காலப்போக்கில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தப் பின் அதை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டது. ஒரு நாள் அந்த இடத்தின் அருகில் கிழங்குகளை எடுக்க வந்த வேடவர் பெண்கள் அந்தக் குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை எடுத்துக் கொண்டு போய் வேடர்களின் தலைவரான நம்பியிடம் கொடுக்க அந்த தம்பதியினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து அந்தக் குழந்தையை தம் குழந்தையாகவே வளர்க்கலாயினர். அதற்கு வள்ளி எனப் பெயர் சூட்டினார்கள்.
வள்ளிக்கு பன்னிரண்டு வயதானபோது வேடர் குல வழக்கப்படி அவளை நெல் கதிர்கள் பயிரிடப்பட்டு இருந்த வயலுக்குச் சென்று அங்கு உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தப் பரணில் அமர்ந்து கொண்டு நெற் கதிர்களை பறித்து உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் துரத்தும் பணியில் அமர்த்தினார்கள். அப்போது ஒரு நாள் அங்கு எதேற்சையாக வந்த நாரதர் அவளது அழகைக் கண்டு வியந்து, உடனே தணிகை மலைக்கு கிளம்பிச் சென்று முருகரிடம் அவள் அழகை பற்றி விவரித்தார். அது மட்டும் அல்ல வேடவ இனத்தினரும், வள்ளியும் அவர் மீது (முருகன் எனும் கடவுள் மீது) வைத்து இருந்த பக்தியைக் குறித்துப் பேசினார்.
அதைக் கேட்ட முருகனும் தன் உருவை ஒரு வேடர் போல மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு சென்று வள்ளியுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு ஆவலுடன் நெருங்கிப் பழகி அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார்.
ஒருநாள் எப்போதும் போல முருகன் வள்ளியை சந்திக்கச் சென்றபோது, வேடன் நம்பி மாவுத் தூள், தேன், வள்ளிக் கிழங்கு, மாம்பழம் மற்றும் காட்டுப் பசுவின் பால் முதலிய உணவைக் கொண்டு வந்தான். தூரத்தில் இருந்தே அவன் வருவதைக் கண்ட முருகன் உடனே தன்னை ஒரு மரம் போல உரு மாற்றிக் கொண்டார். உணவை வல்லிக்குத் தந்தப் பின் நம்பியும் மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்றப் பின் மீண்டும் தன்னை தன் உருவை வேடனாக மாற்றிக் கொண்ட முருகன் வள்ளியிடம் சென்று தான் அவளை தான் காதலிப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட வள்ளி திடுக்கிட்டுப் போய் தலை குனிந்தபடிக் 'கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு வேடவப் பெண்ணை அவர் விரும்புவது முறை அல்ல' என்றாள்.
அப்போது தூரத்தில் பாடல்களைப் பாடிக்க் கொண்டும் நாட்டியம் ஆடிக் கொண்டு வந்து கொண்டு இருந்த கும்பலைக் கண்டு பயந்து போனவள் ' வந்து கொண்டு இருப்பவர்கள் வேடர்கள், கோபக்காரர்கள், உடனே சென்று விடுங்கள்' என்று முருகனிடம் கூற உடனே முருகனும் தன்னை ஒரு சாமியார் போன்ற ஒரு வயதான கிழவர் உருவில் மாற்றிக் கொண்டார். வந்தவர்களும் அவரை ஒரு சிவனடியார் என நினைத்து அவரை வணங்கிவிட்டுச் சென்று விட்டார்கள்.
Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl
Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl.
அவர்கள் சென்றப் பின் அவர் வள்ளியிடம் தனக்கு தேனும், தினையும் கலந்த உணவை தருமாறுக் கேட்க அவளும் அவருக்கு அதை தந்தாள். அவர் அதை உண்டதும் பக்கத்தில் இருந்த ஒரு குளத்தின் அருகில் அவளை அழைத்துக் கொண்டு சென்று தன் இரு கைகளினாலும் தண்ணீரை எடுத்துக் கொடுத்து அவளைக் குடிக்கச் சொன்னார். 'தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தனது காதல் பசியையும் தீர்க்க வேண்டும்' என்று அவளிடம் கேட்டதும், அவளோ தனக்கு நேரமாகி விட்டது எனக் கூறி விட்டு வயலுக்குச் ஓடிச் சென்று விட்டாள். அதனால் முருகனும் தனது சகோதரர் வினாயகரை அழைத்து ஒரு யானை உருவில் சென்று அவள் பின்னால் நிற்குமாறு கூறினார்.
திடீர் என ஒரு யானை தன் பின்னால் வந்து நிற்பதைக் கண்ட வள்ளி பயந்து அலறிக் கொண்டே முருகன் அருகில் ஓடிச் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள அவரும் அவளை தன் உடலோடு அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்றப் பின் அவள் முன்னால் தன்னுடைய உண்மை உருவமான ஆறு தலைகள், பன்னிரண்டு கரங்களைக் காட்டியபடி மயில் மீது அமர்ந்து கொண்டு நின்றார். தான் விரும்பியக் கடவுளே தன் எதிரில் வந்து நின்றதைக் கண்டு மனம் மகிழ்ந்த வள்ளியும், தானும் திருமாலின் மகளே என்றக் கதையையும் கூறினாள்.
Old rogue Murugan
வள்ளியுடன் வயலுக்கு வந்திருந்த தோழியோ இத்தனை நேரமாகியும் குலத்துக்குச் சென்றவள் இன்னும் வரவில்லையே என பயந்து போய் நின்று இருக்க அங்கு வந்த வள்ளியிடம் அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். வள்ளியும் எதோ சால்ஜாப்பைக் கூறி விட்டு உண்மையில் நடந்த கதையை மறைத்தாள்.
அவளைத் தொடர்ந்து அங்கு வேடன் உருவில் வந்த முருகனின் கண்களும், வள்ளியின் கண்களும் சங்கமித்ததைக் கண்டவள் அந்த வேடனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறுக் கூறினாள். ஆனால் வேடன் உருவில் இருந்த முருகனோ தன்னுடையக் காதலை அவளிடம் எடுத்துக் கூறி அவர்கள் காதலுக்கு உதவியாக இருக்க அவளது துணையும் நாடினார். தேவைபட்டால் தனது பொய்க்கால் குதிரையுடன் நடனம் ஆடுபவன் போல அவர்களது கிராமத்துக்கு தான் வந்து விட்டுப் போவதாகவும் கூறினார். வள்ளியின் தோழியும் அதற்கு இணங்கினாள். அறுவடைக் காலமும் முடிந்தது. இனி தன்னால் முருகனைக் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்ட வள்ளியும் மனபாரத்துடன் தனது கிராமத்துக்கு கிளம்பிச் சென்றாள். அவள் திருட்டுத் தனமாக நடத்திக் கொண்டு வந்த காதல் ஒரு முடிவிற்கு வந்தது. அவளுடைய வளர்ப்புத் தாயார் அவளது முக வாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள்.
மலைப் பிரதேசத்தில் அவள் இருந்தபோது தீய ஆவி ஏதும் அவளைப் பிடித்து விட்டதா என்பதைக் கண்டறிய முருகனுக்கு பூஜை செய்து பரிகாரம் காண ஜோதிடர்களை அணுகினாள். அதற்கு இடையில் மீண்டும் வயலுக்குச் சென்று வள்ளியைத் தேடிய முருகன் அங்கு அவளைக் காணாததினால், அவளது தோழியின் உதவியைக் கொண்டு அவளைக் கண்டு பிடித்துப் பார்த்தப் பின் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
மறு நாள் வள்ளியைக் காணாத வேடத் தலைவனான நம்பி கைதேர்ந்த வேடர்களை அனுப்பி அவளை தேடிக் கண்டு பிடிக்குமாறுக் கூறினான். அவர்களும் அவளை பல இடங்களுக்கும் சென்று தேடி விட்டு முடிவாக அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த முருகனைக் கண்டு பிடித்து விட்டு அவர் மீது அம்புகளை வீசினார்கள். ஆனால் அவரது சேவல் எழுப்பிய கர்ஜனையினால் அவர்கள் அனைவரும் மடிந்து விழுந்தார்கள். அவர்கள் மடிந்து விழுந்ததைக் கண்ட வள்ளியும் அழுது புலம்ப முருகனும் அவளுக்கு ஆறுதல் கூறி அவளை தேற்றி அழைத்துக் கொண்டு சென்றார். வழியில் அவர்களைக் கண்ட நாரதர் முருகனிடம் ' அவர் செய்தது சரி அல்ல என்றும், அவளை அவளது பெற்றோர்களிடம் கூறி விட்டே அழைத்து வந்திருக்க வேண்டும்' என்று அறிவுறுத்த முருகனும் இறந்து போன வேடர்களை உயிர் பிழைக்க வைத்து அவர்களுக்கும் தனது சுய உருவைக் காட்டினார்.
அவர்களும் அவரை வணங்கித் துதித்தப் பின் தம்முடைய கிராமத்துக்கு அவர் வந்து தங்களுடைய இன வழக்கப்படி அவளை அவர் மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள அவர்களுடன் அவர் கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து புலித்தோலை பரிசாகக் கொடுத்தார்கள். நாரதர் முன்னிலையில் முருகனின் கரங்களில் வள்ளியின் கரங்களை அவளது வளர்ப்புத் தந்தையான வேடன் நம்பி வைக்க அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக கருதப்பட்டது. அங்கிருந்து கிளம்பிச் சென்ற முருகன் சில நாட்கள் திருத்தணியில் வாழ்ந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி ஸகந்தகிரிக்குச் செல்ல அங்கு வள்ளியையும், முருகனையும் அவரது முதல் மனைவி தெய்வானை அன்புடன் வரவேற்றாள்.
இந்த உணர்ச்சியைத் தூண்டும் கதையின் ஒவ்வொரு வரிகளுமே பண்டைய காலத்தைய தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் விதத்திலேயே அமைந்து உள்ளது தெரியும். இருவரும் இணைந்த இது ஒரு அற்புதமான காவியம். கதாநாயகி மலைவாழ் மக்களிடையே பிறக்கின்றாள், பன்னிரண்டு வயதில் பரண் மீது அமர்ந்து கொண்டு வயல்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கின்றாள், அங்குதான் கடவுளின், அதாவது காதலனின் சந்திப்பும் கள்ளத்தனமான உறவும் துவங்க அதற்கு அவளுடைய தோழி உதவி செய்கிறாள், பொய்க்கால் குதிரையின் ஆட்டம், காதலின் பிரிவினால் வள்ளி அடைந்த சோகம், வள்ளியின் தாயார் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை செய்தது, வேலனின் உக்கிரத் தாண்டவம், முருகனையே வேண்டிக் கொண்டு தீய ஆவியை விரட்டச் செய்த ஏற்பாடுகள், காதலர்கள் ஓடி விட்ட சம்பவம் என அனைத்துமே தமிழர்கள் பாணியிலேயே அமைந்து உள்ளது.
தெய்வ நம்பிக்கையின் கீழ் அமைந்து உள்ள அபூர்வமான ஒரு கதை ஒரு தெய்வத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், அந்தக் கதையின் கருவை நியாயப்படுத்தும் விதத்திலும் நன்கு அமைந்து உள்ளது என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் தெய்வத்தின் அற்புதமான செயல்களைக் கூட சமூகத்தின் மன மாற்றத்துக்கு ஏற்ப வரலாற்று சிறப்பு மிக்க அற்புதமான கதையாக எழுதப்பட்டு உள்ளது.
Old Man Murugan 'saves' Valli from rogue elephant Ganapati
At that moment, Murugan invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the elderly ascetic for protection. Painting from Tiruttani Devasthanam.
வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த தெய்வத்தின் கதையை படிப்படியாக ஆராய்ந்து சரியான முறையில் விளக்கிக் கூறுவதும் அவசியம்.
வள்ளி
வள்ளி என்ற பெயர் திராவிடர்களின் வரலாற்றில் இருந்து வந்தது என்பது தெளிவு. பழங்காலப் பழக்கத்தின்படி வள்ளி என்றப பெயர் வள்ளிச் செடியில் இருந்தே வந்துள்ளது. இது மலை வாழ் மக்களின் மொழியான தா. மா. கா. கோட மற்றும் தீ என்பதில் இருந்தே வந்துள்ளது. அந்தச் செடியின் மேல்புறத்தில் கிளைகள் படர்ந்து இருக்க கீழே நிலத்தடியில் பெருத்து வளரும் வள்ளிக் கிழங்கின் செடி பாழடைந்த பூமியில் வளரும் ஒன்று. இது பற்றிய செய்தி கி .பி 140 - 200 ரில் கபிலர் வாழ்ந்த குறிஞ்சியில் உள்ள குறிஞ்சிப் பட்டு என்றப பகுதியில் வளரும் 99 விதமான செடி கொடிகளின் பெயர்களில் உள்ளது.
பண்டைய தமிழ் நூல்களில் அந்த கிழங்குச் செடியின் பெயரில் அமைந்து இருந்த வள்ளி என்றப பெயர் 18 இடங்களில் கூறப்பட்டு உள்ளது. இது நிச்சயமாக திராவிட இயக்க நூல்களில் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏன் எனில் ஆர்ய வரலாற்றைக் குறிப்பிடும் சம்ஸ்கிருத மொழி நூல்களில் வெகு காலத்துக்குப் பின்னர்தான் வள்ளி எனும் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புராணக் கதையின்படி வள்ளிக் கிழங்கை தோண்டி எடுத்து கொண்டு இருந்தபோது குழந்தை கிடைத்ததினால் அவளுக்கு வள்ளி என்ற பெயரினை வைத்தார்கள். வள்ளிச் செடியைப் பற்றிய செய்தி அகம் 52.1 மற்றும் 286.2, புறம் 316.9, நார் 269.7 மற்றும் பரிபா 21.10 லும் , வள்ளிக் கிழங்கு பற்றி புக் 109.6 மற்றும் கல 39.12 லும் என்குர் 250 முக்கிய செய்தியாகக் கூறப்பட்டு இருந்தாலும் வள்ளிச் செடி பற்றியும் மேலும் முருகன் வழிபாடு பற்றியும் கூறப்பட்டு உள்ளன. ஆறாம் நூற்றாண்டு மற்றும் பக்தி நெறிகள் தோன்றப்படும் காலத்துக்கு முன்பாக எழுதப்பட்டு உள்ள ஏழு நூல்களில்தான் வள்ளி என்பவள் முருகனின் காதலி என்றும் அவளே அவருடைய மனைவி என்றும் கூறப்பட்டு உள்ளது. அவர்களைப் பற்றியக் குறிப்பு நாரா 82.4, திரு முருக 102, பராப் 8.69, 9.8, 9.67 மற்றும் 14.22 லும் சிலப் 24.3 போன்றவற்றில் உள்ளன.
இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த நாரினை 82.4 என்ற மிகப் பழமையான தமிழ் நூலில் குறிஞ்சி என்ற நூலில் அஹம் என்ற பாடலில் உள்ள வரிகள் இவை - 'நீயோ என்னுள் வருதியோ, நலனடக்கோடிச்சி முருகுபுணர்ந்து இயன்ற வள்ளிபோல'. இதன் அர்த்தம் என்ன என்றால் 'ஹே..... பெண்ணே அழகு சொட்டும் மலைப் பெண்ணான நீ முருகனிடம் மகிழ்ச்சியோடு சென்ற வள்ளி போல என்னிடம் வருவாயா' என்பதே. பாலுணர்வை தூண்டும் வகையில் கதாநாயகன் அந்தப் பெண்ணை தன்னுடன் புணரும்படி -முருகுபுணர்ந்து வள்ளி- அதாவது ஆண் பெண் உறவுக்கு அழைப்பது போல அழைக்கின்றான். ஆகவே இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் வள்ளி- முருகன் இடையில் ஏற்பட்ட காதலை அறிந்து இருந்தவர்கள் பால் உணர்வைப் பற்றி நன்கே அறிந்து இருந்தார்கள். அதை மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாக சொல்லவும், கவிஞர்களின் கவித் திறனுக்கு பொருள் தரவும் பயன் படுத்தி உள்ளார்கள். இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இந்தக் கதையைப் பற்றி தெரிந்து இருந்தாலும் சமிஸ்கிருத காவியங்கள் மற்றும் வடநாட்டில் இருந்த எந்த நூலிலும் வள்ளி பற்றிய செய்தி குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதே.
திருமுருகாற்றுப் படை
பல காலத்துக்குப் பிறகு எழுதப்பட்டுள்ள திருமுருகாற்றுப் படை என்ற நூல் மற்றவற்றை விட மாறுபட்ட நூலாகும். இது கவிநயம் மிக்க நூலாக மட்டும் அல்ல இலக்கியங்களில் முதன் முறையாக முருகனை கடவுள் எனத் துதிக்கும் வகையிலான நூலாகவே இருந்தது.
திருமுருகாற்றுப் படையில் வள்ளியை கபடமற்ற மலை வாழ் பெண்ணாகவே கூறி அவளுக்கு கொடி போன்ற இடை இருந்ததாகவும், அவளை சாந்தமான முகத்துடன் முருகன் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் எழுதப்பட்டு உள்ளது. திருமுருகாற்றுப் படையில் முதன் முறையாக சமிஸ்கிருத நூல்களில் கூறப்பட்டு உள்ள ஸ்கந்த முருகனைப் பற்றி மறைமுகமாக எழுதப்பட்டு உள்ளது. அதில் பிராமண குல வழக்கப்படி நடத்தப்படும் திருமணங்களைப் பற்றி கூறியப் பின் தேவசேனாவின் (தெய்வானையின்) கற்பைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. தேவசேனா செய்து கொண்ட திருமணம் வைதீக முறையிலான முறையில் அமைந்து இருக்க வள்ளியின் திருமணமோ ஆரியர்களின் காலத்துக்கு முற்பட்ட காதல் திருமணமாக, ஆச்சார, வைதீகமற்ற முறையில் நடந்த திருமணம் என்கின்றது. உண்மையில் வள்ளி- முருகன் இவருடையக் காதலும் திருமணத்துக்கு முன்னர் தோன்றிய காதலினால் இணைந்தவர்கள் என்றும் மிகப் புராதான காலத்தில் எழுதப்பட்டு உள்ள உண்மையானக் கதையின் நாயகர்கள் என்றும் நினைக்க வேண்டி உள்ளது.
http://murugan.org/tamil/zvelebil.htm
லேபிள்கள்:
தமிழ் கடவுள்,
திராவிடர்,
முருகன்,
வள்ளி,
வேடன்
சேகுவேராவை கையில் எடுத்தார்
கலைஞரை தூக்கி எறிந்தார்,
பெரியாரை கையில் எடுத்தார்
சேகுவேராவை தூக்கி எறிந்தார்,
பிரபாகரனை கையில் எடுத்தார்
பெரியாரை தூக்கி எறிந்தார்,
பிரபாகரனை தூக்கி எறியத்தான்
இப்போது முருகனை தூக்கி பிடிக்கிறார் நடிகர்
தமிழர்களே இவரின் பரிணாம வளர்ச்சியை கவனியுங்கள்
தன் தேவைக்கு திராவிடத்தை பயன்படுத்தும் இவர்
நாளை பதவி கிடைக்கவில்லை என்றால்
தமிழர் அடையாளத்தையும் தூக்கி எறியத்
தயங்கமாட்டார் எச்சரிக்கை!!!.
லேபிள்கள்:
சீமான்,
நாம் தமிழர்,
naam thamizar,
seeman
திராவிடமா, தமிழ்த் தேசியமா? ஓர் அரிய செய்தி!
16.02.2015 அன்று நடைபெற்ற விவாதத்தில் பல செய்திகள் பரிமாறப் பட்டுள்ளன. தவறான செய்திகள் மக்களைச் சென்றடைந்து விடக் கூடாது என்னும் நோக்கில் கீழ்க்காணும் விளக்கம் தரப்படுகிறது.
தோழர் மணியரசன் தன் உரையில், "அயோத்திதாசரிடம் பின்னாளில் மாற்றம் வந்தது. சென்சஸ் கணக்கு எடுப்பின் போது, 'எங்களைச் சாதியற்ற தமிழர் என்று குறியுங்கள்' என்று மனுப் போட்டார். திராவிடர்ன்னு சொல்லலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
நண்பர் வாலாசா வல்லவன் அந்தச் செய்தியில் பிழை உள்ளது என்று உறுதிபடக் கூறினார். உடனே, ஞான அல்லோசியஸ் தொகுத்துள்ள அயோத்திதாசர் சிந்தனைகள் இரண்டு தொகுதிகளையும் மீண்டும் எடுத்துப் படித்தபோது,வல்லவன் சொல்லியதே சரி என்பது உறுதியானது. இறுதிவரையில் அவர் திராவிடர் என்னும் சொல்லையே மிகப் பலவிடங்களில் பயன்படுத்தியுள்ளார். மணியரசன் குறிப்பிடும் மனு, முதல் தொகுதியில் 307-08 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.அவ்வரிகள் அப்படியே கீழே தரப்படுகின்றன:
"இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்."
இம்மனு 1910 டிசம்பர் 14 அன்று எழுதபட்டுள்ளது. அயோத்திதாசரின் இறுதி ஆண்டுகளான 1913,14 ஆகியவற்றிலும் பல இடங்களில் அவர் திராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். -
-சுப.வீரபாண்டியன்-
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா?
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஓர்அறிவிப்பு வெளி வந்தது; தாலியைக் குறித்து ஒட்டி வெட்டிப் பேசும் விவாதம் அது - அதனைக் கண்ணுற்ற இந்துத்துவா சக்திகள் ஆகா - இந்துக் கலாச்சாரத்துக்கு ஆபத்து! ஆபத்து!! இதனை அனுமதி யோம்! என்று ஆயிரம் கால் மிருகமாகக் கர்ச்சித்தனர். அந்த நிறுவனத்துக்குப் பல வகை களிலும் அழுத்தம் கொடுத்தனர் - ஒரு கட்டத்தில் அச்சுறுத்தவும் செய்தனர்.
அதை ஒளிபரப்பி விடுவார்களோ என்ற எதிர்பார்ப்பில் கடந்த எட்டாம் தேதி புதிய தலைமுறை அலுவலகத்துக்குள்ளேயே தாக்குதல் தொடுத்துள்ளனர் - தடித்தனமாக - ஊடகவியலாளரான பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர்களின் அராஜகம் அடங்கிடவில்லை.
12.3.2015 வியாழன் அதிகாலை 3 மணியளவில் டிபன்பாக்ஸ் வெடி குண்டு களை புதிய தலைமுறை அலுவலகத்தில் வீசி எறிந்து தங்களின் வெறி உணர்வைத் தீர்த்துக் கொண்டனர்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்து இளைஞர்சேனா என்ற அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர் எங்கள் அமைப்புதான் இதனைச் செய்தது; நாங்கள் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி மதுரை ஆறாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட் ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
நீதிமன்ற காவலில் வரும் 19ஆம் தேதி வரை வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித் துள்ளது. மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார்கள் மற்றும் பிஜேபியினர் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்கள் - சொல்லுவார்கள்?
எங்களுக்கும் அந்த அமைப்புக்கும் சம்பந்தமேயில்லை என்ற துணியைப் போட்டுத் தாண்டுவார்கள்
காந்தியாரை நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்றபோதும் (30.1.1948) அப்படித்தான் சொன்னார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபையைச் சேர்ந்தவர் என்று சாதித் தார்கள்.
(ஆனால் அவரின் குடும்பத்தவர் களோ காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேவோ நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.தான்; அவனை ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று அத்வானி கூறுவது அசல் கோழைத்தனம் என்று சொன்னதை நேர்முக பேட்டி மூலம் இந்துக் குழுமத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் இதழ் அம்பலப்படுத்தவில்லையா?)
அதே வகையில் தான் புதிய தலைமுறை வன்முறைக்குத் தாங்கள் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவதுபோல பிஜேபியின் தேசியச் செயலாளர் எச். ராஜா என்பவர் தனது இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வன் முறைக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
தாலிபற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதத்திற்கு தேர்ந்தெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத் தக்க ஒன்றாகும். இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதால்தான் இவர்கள் இந்துமத பழக்க வழக்கங் களில் மட்டும் கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.
பெண்களுக்குத் தாலி தேவையா? இல்லையா? என்ற விவாதத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் - என்று பிஜேபியின் தேசிய செயலாளர் ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார் என்றால் இதன் உள்ளடக்கம் என்ன?
தாக்கியவர்களை எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை; மாறாக அவர்கள்மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய தலைமுறை மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக் கிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறையில் இருப்பவர்களைச் சந்தித்துள் ளீர்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் என்ன சொன்னார்? சிறையில் இருக்கும் எங்கள் தோழர்களைத் தானே பார்த்தோம் என்று, சொன்னதன் மூலம் புதிய தலைமுறை தாக்கப்பட்டதற்குப் பின்னணி யில் இருந்தவர்கள் இந்தக் கம்பெனிதான் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. (காவல்துறை என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்!)
இந்துத்துவாவாதிகள் இதில் தலையிடு வதற்கு என்ன இருக்கிறது? தமிழர்களுக்கும் இந்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்களே - சட்ட ரீதியான தில்லுமுல்லுகளால் அப்படி ஒரு சூழலை உருவாக்கி இருக்கலாம்; ஆனால் பண்பாட்டு ரீதியாக இந்துவுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?
தமிழ்க் கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என்று போற்றப்படும் கா. சுப்பிரமணியம்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்கள் தமிழர்கள் இந்து அல்லவென்றும் சைவம் வேறு இந்து வேறு என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெட்டி வீழ்த்திவிட வில்லையா?
இந்த நிலையில் இந்து மதக் கலாச்சாரத்தை தமிழர்கள்மீது திணிக்க இவர்கள் யார்? நியாயப்படி இவர்கள் மேற்கொள்ளும் இதே அணுகுமுறையை பார்ப்பனர்களால் தமிழர்கள்மீது திணிக்கப் படும் சடங்குகளின்மீது தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளலாமா?
தமிழன் கட்டிய கோயிலில் கருவறைக் குள் புகுந்து நாங்கள் மட்டும்தான் அர்ச்சனை செயயலாம்; நீ சூத்திரன் வெளியில் நில்லு! என்று பார்ப்பனர்கள் கூறும் கோயிலுக்குள் புகுந்து தமிழர்கள் இதே வேலையைச் செய்தால் என்னாவது?
தமிழ்நாட்டுக் கோயிலுக்குள் வழிபாட்டு முறை தமிழில் அல்லாமல் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து நாமும் கோயிலுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட லாமா? (ஆனால் அந்த வன்முறைகளில் நமக்கு நம்பிக்கை இல்லாததால் அறிவு வழியாக அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்).
தமிழர்களுக்குத் தாலி கிடையாது என்று அறிஞர் டாக்டர் இரா. இராசமாணிக்கனார் தனி நூலே எழுதியுள்ளார் (தமிழர் திருமணத்தில் தாலி - என்பது அந்நூலின் பெயர்)
தமிழர் திருமணம் தொடர்பாக அகநானூற்றில் (பாடல் எண் 86, 136) இரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் தாலி என்ற பேச்சுக்கே இடமில்லையே! அப்படி இருக்கும் பொழுது தமிழர்களுக்குத் தொடர்பே இல்லாத தாலியைப்பற்றி தமிழர்கள் விவாதம் நடத்தக் கூடாதா? இடையில் புகுத்தப்பட்டது குறித்து கருத்துத் தெரிவிக்கக் கூடாதா?
அப்படியே பார்த்தாலும் தாலி என்ற சொல்லுக்குப் பனை ஓலை - தொங்க விடுவது என்றுதான் பொருள். இப்பொழுது தாலியை இவ்வாறு தான் பயன்படுத்து கிறார்களா?
தங்கத்தினால் செய்து அல்லவா தொங்க விடுகிறார்கள். கழுத்தை உறுத்தும் என்பதற்காக இரவில் கழற்றி வைத்து விடுவதில்லையா? அப்பொழுது மட்டும் ஆச்சாரம் கெடாதா? ஏழைகள் அவசரத் துக்குத் தாலியை அடகு வைக்கிறார்களே- இந்துத்துவாவாதிகள் அடகுக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் செய்வார்களோ!
தாலியிலும்கூட ஆரியம் ஜாதியைத் திணித்துள்ளதே! பறத்தாலி, பாப்பாரத் தாலி, பொட்டுத் தாலி, பிறைத்தாலி, சிலுவைத் தாலி என்று பிரித்து வைத்துள்ளார்களே! புலித்தாலி என்றால் காட்டுக்குச் சென்று புலியோடு சண்டை போட்டு புலியின் பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் தாலியாகக் கட்ட வேண்டுமாம்! எத்தனைப் பேர் தயார்! ராம கோபாலன் கம்பெனிகள் முன் வரட்டுமே!
தந்தை பெரியார் அவர்களால் 1928 முதல் (மே - 28) அறிமுகப்படுத்தப்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போது சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடி யாக்கும் சட்டத்தைச் செய்வித்தாரே- (20.1.1968 - குடியரசு தலைவர் ஒப்புதல்) அந்தத் திருமண சட்டத்தில் தாலியைக் கட்டாயமாக்கவில்லையே! மாலை அணிவித்தாலோ, மோதிரம் மாற்றிக் கொண் டாலோ போதும் என்று கூறப்பட்டுள்ளதே!
ஆயிரக்கணக்கான பெண்கள் அக்கொள்கையை ஏற்று தாலி கட்டாமல் திருமணங்களைச் செய்து கொண்டு வருகிறார்களே - ஏற்கெனவே ஏதோ ஒரு சூழ்நிலையில் தாலி கட்ட நேர்ந்த நிலையில், திராவிடர் கழக மேடைகளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறதே - இப்பொழுதுகூட புதிய தலைமுறை ஒளிபரப்புப் பிரச் சினையில் எந்தஒரு தமிழ்நாட்டுப் பெண்ணும் எதிர்ப்புக் குரல் கொடுக்க வில்லையே! இந்த இந்து வெறி ஆண்கள் தானே குதியாட்டம் போடுகிறார்கள்.
ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட தற்கு அடையாளம்தான் தாலி என்றால், ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டதற்கு என்ன அடையாளம்? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன பதில்? பார்ப்பனர்கள் நடத்தி வைக்கும் சூத்திரர்கள் வீட்டுத் திருமணத்தில் ஒரு சடங்கை மறக்காமல் செய்வார்கள்.
மணமகன் சூத்திரன் என்பதால், அவனுக்கு மந்திரங்கள் ஓதப்படக் கூடாது என்ற அவாளின் சாத்திர முறையால் மணமகனுக்குப் பூணூல் அணிவிப்பார்கள் கல்யாண சடங்குகள் முடிந்த நிலையில் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பையில் தூக்கி எறிந்து விடுவர்; பூணூல் மட்டும் தற்காலிகம்; தாலி மட்டும் நிரந்தரமா? எது பார்ப்பனர்களின் உயர் ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ, அதனைக் கட்டிக் காப்பதுதான் அவாளின் திடச்சித்தம்!
ஊடகங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை மதவாதத்தின் ஆபத்தைப் புரிந்து கொண்டு அதன் ஆணி வேரை வீழ்த்தும் பணி என்பது எத்தகைய முக்கியமானது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் ஒளிபரப்ப வேண்டும்.
அதை விட்டு விட்டு எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்ற பெயரால் மசாலா கலவை நிகழ்ச்சிகளை நடத்திச் சென்றால் இந்த அடிப்படைவாதிகளின் கொம்புகள் மேலும் கூர்மை அடையத்தான் செய்யும் - எச்சரிக்கை! தனக்கு வந்தால்தான் தலைவலியும் திருகுவலியும் என்ற மனப்பான்மை கூடாது!
பிஜேபி, சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஊடகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனராம். இந்தச் சந்தர்ப்பத்தை ஊடகத் துறையினர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் குப்பைத் தொட்டிகளை வெளியே நிறுத்தி விடும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றே மகிழ வேண்டும்.
அதே நேரத்தில் சென்னையில் ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் இந்தப் பிஜேபி மதவாத சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் ஒரு பிரபலமான புகழ் பெற்ற ஊடகலியலாளர் ஒதுக்கி வைக்கப்பட்டாரே! தலைவர்கள் கண்டித்து அறிக்கை விடுத்தும் நிருவாகம் யாருக்குப் பணிந்தது என்பது எல்லோருக்கும் தெரியுமே! அந்தத் தைரியம் தான் இப்பொழுதும்.
ஏதோ புதிய தலைமுறைக்கு வந்தது என்று நினையாமல் (அது ஒரு குறியீடுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் கூறியுள்ளார் இந்தக் கருத்தை) மற்ற நிறுவனங்களிலிருந்தும் பாசிசக் குப்பைகளை வெளியே வீசுவது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லதே!
............
போப் முதல் புதிய தலைமுறை வரை
கருத்துச்சுதந்தரம் என்பதைக் கடுகளவும் அனுமதிக்காக குணம் பாசிசத்தில் பிரதானமானது. இங்கு இருக்கும் ஒரே கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் மட்டுமே - என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தின் முடிந்த முடிவு.
அதற்கு மாறாக இன்னொரு கலாச்சாரம் என்பதுபற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படி யாரேனும் அத்தகையப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவார்களேயானால் தசைப்பலத்தால் விநீறீமீ றிஷீஷ்மீக்ஷீ அவர்களை எலும்பு, சதை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.
சிவசேனை - பா.ஜ.க.கூட்டணி ஆட்சியில் மும்பை நகரப் பகுதிக்குள் யார் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் அவர்கள் முன்கூட்டியே பால்தாக்கரேயின் மகன் உத்கர்தாக்கரே குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிகழ்ச்சிகள் தூள் தூள்தான்! அதுபோல, எத்தனையோ நிகழ்வுகள் நடந்ததுண்டு.
1998 டிசம்பர் 2-இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3-இல் டில்லியிலும் தீபாமேத்தாவின் ஃபயர் திரைப்படத்திற்கு எதிராக சிவசேனையினர், சங்பரிவாரத்தினர் பெரும் இரகளையில் ஈடுபட்டனர். சுவரொட்டிகள் தீயிடப் பட்டன. திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன!
1998 ஏப்ரல் 26 ஆம் நாளன்று சிவசேனைக் காலிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான குலாம் அலி நிகழ்த்த இருந்த இசை நிகழ்ச்சி அரங்கினுள் நுழைந்து துவம்சம் செய்தார்கள்.
1996 மே திங்களில் மும்பையில் இர்ஃபான் ஹூசேனி ஓவிய அரங்கு தீக்கிரையாக்கப் பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் இந்து மதக்கடவுளச்சியான சரஸ்வதியை ஆபாசமாக வரைந்திருந்தாராம் - அதுதான் காரணமாம்.
கோபிகாஸ்திரீகளை நிர்வாணப்படுத்தி ரசித்த கோகுல கிருஷ்ணனை கடவுளாகக் கும்பிடும் இந்த கூட்டத்துக்கு இதுபோலெல்லாம் சிந்திப்பதற்கே முதலில் அருகதை கிடையாதே! ஓவியர் ஹூசேன் ஓவியங்கள் அழிக்கப்பட்டபோது சிவசேனையின் தலைவர் பால்தாக்கரே என்ன கூறினார்?
ஹூசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று ஆணவத்துடன் கேட்டார் அந்த ஆரியப் பிதாமகர்!
1999 செப்டம்பர் 23 உ.பி.தலைநகரான லக்னோவில் நாடகத்தை நடத்திவிட்டு, சஹ்மத் ரங்க்மஞ்ச் நாடகக்குழு திரும்பிக்கொண்டிருந்த போது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழிமறித்துத் தாக்கி கலைஞர்களைப் படுகாயப்படுத்தியது.
உ.பி.மாநில பிஜேபி மேலவை உறுப்பினரான (எம்.எல்.சி) அஜீத் சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக்காவிக் கொலைவெறிக்கும்பல் தாக்குதலைத் தொடுத்தது.
1999 மே நாளன்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூர் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம்.நாகராஜ் தலைமையில் காவிக் கும்பலால் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.
1999 நவம்பரில் இந்தியாவிற்கு வந்த உலகக் கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான இரண்டாவது ஜான்பால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார்?
இந்தியாவில் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் - பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி 1999 ஜூலை 13 ஆம் நாள் டில்லியில் லி-மெரிடின் ஓட்டலுக்கு முன் சிவசேனையினர் திலீப்குமாரின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆட்டம் போட்டனர்.
இவ்வளவுக்கும் வாஜ்பேயி, அத்வானி ஆகியோரின் ஆசிர்வாதம் அனுமதியுடன் தான் அந்த விருதை திலீப்குமார் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரங்களைக் கையில் வைத்துக்கொண்டிருந்த அந்த பெரிய மனிதர்கள் இந்தியத் தலைநகரிலே நடைபெற்ற இந்த கேடுகெட்ட செயலைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை - என்ன வெட்கக்கேடு!
அவுட்லுக் இதழின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹூசேன். வகுப்புவாத வெறித்தனங்களை தமக்கே உரித்தான நுட்பத்தோடு கார்ட்டூன் மூலம் தோலுரித்துக் காட்டக்கூடியவர் - பொறுக்குமா காட்டு மனிதர்களுக்கு?
குரூரமான முறையில் அந்த மாபெரும் ஓவியனைக் கொலை செய்து சாக்குப்பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டி விட்டுவிட்டனர். பாகிஸ்தான் இந்தியாவோடு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்பதற்காக ஆடு களத்தைச் சேதப்படுத்தியவர்கள் யார்?
ஏன் வெளியில் போவானேன்? சென்னையில் பாரதியார் நினைவிடத்தில் என்ன நடந்தது?
1998 செப்டம்பர் 13 அன்று சென்னை- திருவல்லிக்கேணியில் உள்ள கவிஞன் பாரதி நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழா நடத்தப்பட்டபொழுது இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்த கவிஞர்களைத் தாக்கி தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறியவில்லையா?
பாசிசத்தின் தகப்பன் முசோலினி இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த இந்துத்துவா கூட்டத்திடம் பிச்சையல்லவா வாங்கி இருப்பான்!
வந்தே மாதரம் பாடல் உ.பி.அரசால் கட்டாயப்படுத்தப்பட்டது. சரஸ்வதி வந்தனாவும் அங்குக் கட்டாயம். இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அபுல் ஹசன் அலி நத்வி அந்தப் பாடல்கள் பாடப்படும் பள்ளிகளுக்கு இஸ்லாமியப் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக என்ன நடந்தது? அந்த மார்க்க அறிஞன் வீட்டில் திடுதிப்பென்று நுழைந்து உ.பி.மாநிலக் காவல் துறை சோதனையிட்டு அவமானப்படுத்தியது (23.11.1998)
மற்ற மற்ற இடங்களில் நடந்ததெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் ரவுடிசம் என்றால் இங்கு ஒரு அரசே தன் கருத்துக்கு ஆகாதாவர்களை அச்சுறுத்துவது என்னும் பாசிச முறையைக் கையாண்டது!
தீபாமேத்தாவின் வாட்டர் திரைப்படப் படப்பிடிப்பின் கெதி என்ன என்று யாருக்குத் தெரியாது? அரசு அனுமதி பெற்றிருந்தும் ஒரு செயல் தடை செய்யப்படுகிறது என்றால், அரசுக்கும் மிஞ்சிய அராஜகக்கும்பல் ஒன்று இங்கு ஆட்டம் போடுகிறது, அதன் கட்டுப்பாட்டில் அரசும் இருக்கிறது என்றுதானே பொருள்?
புதிய தலைமுறை தாக்கப்பட்டதும் இந்த தொடர்ச்சியில் தான்.
லேபிள்கள்:
தமிழர் திருமணம்,
தாலி,
திருமணம்,
மாங்கல்யம்,
thaali,
thali
பிசிசிஐ { brahmin of Control for Cricket in India } என்ற தனியார் மட்டைப்பந்து அணிதான் 1920 முதல்
இன்றுவரை இந்திய அணிக்காக விளையாடி வருகின்றது
இந்திய அரசால் 41 ஆண்டுகளில்
ஒரு 15 பேர் கொண்ட அணியை உருவாக முடியாத நிலையை
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் அதிகார பலத்தால் இந்திய அரசுக்கு வாய்ப் பூட்டு சட்டம் போட்டிருக்கிறார்கள்
ஒரு வேலை இந்திய அரசு தனியாக ஒரு அணியை உருவாக்கினால் அதில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற நேரிடும் என்ற பயமே பார்ப்பனர்களுக்கு உள்ளது
அதற்க்காகதான் இப்போது நாம் தனியார் துறைகளிளும்
இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறோம்.
ஆரியப் பார்ப்பன சூழ்ச்சியால் தன் மரபு வழி விளையாட்டான சடுகுடுவை{கபடி} மறந்த தமிழன்
வீடு முதல் வீதி வரை மட்டைப்பந்து என்ற கிரிகெட்டை பிடித்து தொங்கிக்கொண்டுள்ளான்
கிரிகெட்டை நேசிக்கும் தமிழனுக்கு அதன் சூழ்ச்சி தெரியாது,
எப்படி கடவுளை வணங்க கோயில் செல்லும் தமிழனுக்கு கருவறையில் நுழைய தடையோ அப்படிதான் இங்கேயும்
தமிழன் வேடிக்கை மட்டுதான் பார்க்கவேண்டும் உள்ளே போய் விளையாட முடியாது
கடவுளை வணங்கும் தமிழனுக்கு கடவுளை அர்ச்சனை செய்யும் உரிமையை கடவுள் மறுப்பாளர்கள் எப்படி போராடி பெற்றுத்தருகிறார்களோ
அப்படிதான் மட்டைப்பந்து {கிரிக்கெட்} விளையாட்டை விரும்பாத
நாங்கள் அதை பார்க்கும் நேசிக்கும் சகதமிழனுக்கு தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்று போராடுகிறோம்.
ஆரிய சூழ்ச்சிக்கு எதிராக அணி திரள்வீர்!!
-செல்வேந்திரன் கு-
லேபிள்கள்:
கிரிக்கெட்,
மட்டைபந்து,
Bcci,
cricket
லேபிள்கள்:
ஏசு,
கிருத்துவம்,
சிலுவை,
புனித வெள்ளி
இதுதான் வாயை கொடுத்து எதையோ
புண்ணாக்கி கொள்ளும் கதை
கடவுள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது அதை
நிருபிக்கும் வகையில் உண்டு என்று போராடுகிறார்கள்
வேதப்படி கடவுளை பரப்பாத பார்ப்பான் அயோக்கியன் என்று அவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள் {உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் வேலையை விட்டுவிட்டு கடவுளை பரப்ப செல்வார்களா..?}
அடடா ஒரு வரியாக இருந்தாலும் இதுதான் பெரியாரின் வெற்றி
"கடவுளை கற்பிக்காதவன் முட்டாள் என்றால்!! கடவுளை கற்ப்பித்தவன் அறிவாளிதானே...? அப்போ கடவுள் ''கற்ப்பிக்கப்பட்டவை'' என்ற பெரியாரின் கூற்று வெற்றிபெற்றதாகதானே அர்த்தம்
இதனால்தான் பக்தி வந்தால் புத்தி போய்விடும்
புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்றார்
அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.
மநு"நீதியையும்" போலி தமிழ்தேசிய பின்னனியையும்
தோலுரித்து காட்டியுள்ளார் தோழர் Sembian Parithi
அனைவரும் பகிருங்கள்.
ஜெயா விடுதலை - மனு நீதி மீண்டும் நிலை நாட்டப்பட்டது
கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மேல் முறையீட்டு வழக்கில் குற்றவாளி பார்ப்பன பாசிச ஜெயலலிதா என்கிற கோமளவல்லி ஊழல் குற்ற வழக்கிலிருந்து தான் கொள்ளையிட்ட சொத்துக்களுடன் இன்று 11-05-2015-ல் முழுவதுமாக விடுவிக்கப் பட்டிருக்கிறார். முடக்கப்பட்ட ஊழல் சொத்துக்களையும் உடனே விடுவிக்க வேண்டுமென்று கர்நாடக நீதி(?)பதி குமாரசாமி தன் தீர்ப்பில்(?) தெரிவித்திருக்கிறார். சரியாக காலை 10.59 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்த எடுப்பிலேயே, "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார். 18.5 ஆண்டுகளாக நடைபெற்ற ஊழல் வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது வெறும் 41 நாட்கள் விசாரணை; இரண்டு நிமிடத்தில் தீர்ப்பு.
தீர்ப்பை வழிநடத்திய பார்ப்பன பாசிச பா.ஜ.க. தீர்ப்பை விமர்சிப்பவர்கள் மீது அறச்சீற்றம் கொண்டெழுந்து கடித்துக் குதறுகிறது. நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்குப் பின் கடந்த சில நாட்களாக ஜெயாவும் பா.ஜ.க.வும் எதிரிகளைப் போன்று நடத்தி வந்த தோல்வியடைந்த நாடகம் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
முன்னதாக இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தன் தீர்ப்பில் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
தீர்ப்பைக் கண்டு கொதித்துப் போன 'உச்சிக் குடுமி மன்றம்' உடனே பிணை வழங்கி ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது. இந்த வழக்கை ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் இழுத்தடித்துக் கொண்டேயிருந்தாலோ தண்டனை வழங்கப்படாமல் இருந்திருந்தாலோ வழக்கை முடிக்க 'உச்சிக் குடுமி மன்றம்' கால வரையறையை நிர்ணயித்திருக்காது. தண்டனை வந்ததாலேயே வழக்கை தான் விரும்பியபடி முடிக்க எண்ணியது.
இந்த ஊழல் குற்றத்தை ஊழல் வழக்கு என்று நுணுக்கமாகத் திசை திருப்பி, இது ஏதோ ஜெயாவின் பகைவர்கள் (தி.மு.க.) அவரை ஒழித்துக்கட்ட அவர் மீது திட்டமிட்டு புகார் கூறியுள்ளதாகவும் அதை 'உரிய' முறையில் விசாரித்து அதில் 'உண்மை(?)' உள்ளதா என்று விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதைப் போன்று நீதிமன்றங்கள் ('உச்சிக் குடுமி மன்றமும்', கர்நாடக உயர் நீதிமன்றமும்) பாவனை செய்து வந்தன. இப்படித்தான் இந்த ஊழல் குற்றமானது ஊழல் புகாராக மாற்றப்பட்டு பொய்ப் புகாராக இரண்டே நிமிடத்தில் தீர்ப்பெழுதப்பட்டது.
இந்தப் புகாரை(?) 'உச்சிக் குடுமி மன்றம்' தன் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து ஜெயா பிணை முடிவதற்குள் 'தீர்ப்பை'யே வழங்கிடுமாறு உத்தரவிட்டது. வழக்கின் எல்லா நிலைகளிலும் நட்சத்திர விடுதிப் பணியாளர் தன் விருந்தினரை உபசரிப்பது போல் 'உச்சிக் குடுமி மன்றம்' வழக்கின் கூடவே பயணித்து நன்கு கவனித்துக் கொண்டது. ஏற்கனவே முடிவு செய்யப் பட்டதைத் தீர்ப்பாக அறிவிக்க எதற்கு ஆயிரக்கணக்கான பக்கங்கள், வாதங்கள்? மனுநீதியை வழங்க எதற்கு அதிக நேரம்?
அந்த மனு நீதி இதுதான்:
எந்தப் பாவம் (கொலைக் குற்றமே) செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி பொருளை கொடுத்து ஊரை விட்டுத் துரத்துக (8 : 380).
ஜெயாவின் பார்ப்பன புனிதத்திற்குக் காயமின்றி கொள்ளையடித்த பொருட்களுடன் தமிழகத்தை ஆட்சி செய்ய (மீண்டும் கொள்ளையடிக்க) கர்நாடகச் சிறையிலிருந்து தமிழகத்துக்குத் துரத்துக.
இதற்கு இரண்டு நிமிடங்கள் தேவையில்லை; ஏற்கனவே ஒரு சூத்திரன் சொன்னது தவறென்று சொல்வதற்குத் தான் அவ்வளவு(?!) நேரம்.
அடுத்து, பின்வரும் மனுதர்ம சுலோகங்களே ஜெயாவின் குற்றச் செயலுக்கும் அவருக்கான நீதிக்கான அடிப்படையுமாகும்:
"சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." - அ.11. சு.13.
"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." - அ.11. சு.20.
இம் மனுநீதித் தீர்ப்பின் நீட்சியாக 2G வழக்கு விரைந்து முடிக்கப்படும். அதன் தீர்ப்பு வருமாறு:
பிராமணனுக்குத் தலையை முண்டனம் (மொட்டை அடித்தல்) செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).
பார்ப்பனனுக்கு தலையை மொட்டை அடித்தாலே அது மரண தண்டனைக்கு ஒப்பாகுமாம், ஆனால் பிறருக்கோ பார்ப்பான் செய்த அதே குற்றத்துக்கு மரண தண்டனையே வழங்கப்படும். மேற்கண்ட மனுநீதியே 2G வழக்கின் தீர்ப்பாகும். அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கும் ஊழல் வழக்குகளில் அளிக்கப்பட சிறைத் தண்டனைக்கும் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படாத சிறைத் தண்டனைக்கும் மேற்கண்ட மனுநீதி விதிகளே காரணமாகும்.
இது ஒரு விநோதத் தீர்ப்பென்று ஜனநாயகத்தின் காவலர்கள் புலம்புகிறார்கள். விநோதத்திற்குக் காரணம் குற்றவாளி, அவருக்கு எதிராக வாதாட அவர் சார்பாக ஒருவர், அவருக்கு ஆதரவாக வாதாட அவர் சார்பாக இன்னொருவர், இருவர் பேச்சையும் கேட்டு குற்றவாளிக்கு நீதி வழங்க அவர் சார்பாக மூன்றாமவர் என மூவரையுமே குற்றஞ் சாட்டப்பட்டவரே நியமித்தது தான்! ஆனால் இந்திய நாணயத்தின் இரு பக்கங்களாக ஒருங்கே ஆட்சி செய்யும் பார்ப்பன பாசிசமும் தரகு முதலாளித்துவமும் ஊழல் என்கிற ஒரே வேரில் இருந்து தான் வெளிக் கிளம்புகின்றன.
இந்தியா முழுவதும் 3.56 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் தேங்கியிருக்கின்றன. ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சௌகான் "இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்" என்று கூறிய நிலையில் எதிர்தரப்பு வழக்குரைஞர் நியமனமே செல்லாததாக அறிவிக்கப்பட்டும் வழக்கு நடத்தும் அரசு சார்பாக வழக்குரைஞர் கூட இல்லாமலும் 41 நாட்களில் வெறும் இரண்டே நிமிடங்களில் தீர்ப்பு கூறப்பட்டது இந்திய அரசமைப்பு மற்றும் நீதித்துறைகளின் யோக்கியதையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நேற்று வரை நடிகர் சல்மான் கானின் வழக்கில் சாம பேத தண்டங்களை சூறாவளி போல் சுழற்றிய விபச்சார ஊடகங்கள் வெறும் சில மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அருவெறுப்பாக நேர் எதிராகப் பேசுகின்றன.
'தி இந்து' தீர்ப்பு வந்தவுடனேயே பாசிச ஜெயாவை போராளியாக்கும் வேலையில் ஈனத்தனமாக இறங்கி விட்டது. தன் இணைய இதழில் தன்னுடைய நச்சுக் கருத்தை வாசகனின் மண்டைக்குள் ஏற்ற கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் கேள்வி பதிலை ஜெயலலிதாவை புனிதப்படுத்தும் நோக்கில் குவியப்படுத்திப் போட்டுள்ளது. அதை ஊன்றி கவனியுங்கள்:
சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது...
• விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
• பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி
• தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை
கருத்துக் கணிப்புகள் என்பவை இப்படித்தான் பொதுக் கருத்துகளுக்கு எதிராக மாயக் கருத்துகளாக கருத்துத் திணிப்புகளாக அறிவியலுக்கு முரணாக உள்ளன. இதைத் தான், 'உலகில் எதை வேண்டுமானாலும் நிரூபிப்பதற்கு "வாதங்களை"த் தேடித் பிடிக்க முடியும்' என்று ஹெகல் மிகப் பொருத்தமாகக் கூறினார்.
ஜெயாவின் விடுதலை தமிழக பார்ப்பன சாம்ராச்சியத்தின் முன் நிபந்தனை
ஜெயாவை ஒழித்துக் காட்டினால் தான் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியும் என்பதால் அவருக்கு அத்தகையதொரு தண்டனையை பா.ஜ.க. வாங்கிக் கொடுத்தது என்று நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை சுட்டிக் காட்டி தமிழினத்தின் புதிய காவலர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டவர்கள், தமிழின வியாதிகள், ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்கள். ஆனால் குமாரசாமியின் தீர்ப்பு(?!) வந்த போது அந்தச் சதியை முறியடித்து அவர் வெற்றி வாகை சூடியதாக அக்கோட்பாட்டில் ஒரு பின்னிணைப்பைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். எப்படியாகிலும் ஜெயலலிதாவுக்கு சேவை செய்து உயிர் விட வேண்டுமென்பதே அவர்களின் தமிழின மீட்சிக்கான இலட்சியம். இத்தகைய இணைப்புகள் இன்னும் நீளும்.
சரி, இவ்வகைப் பிரச்சாரத்தின் உள்நோக்கம் என்ன? அதன் பின்னணி என்ன?
முதலாவதாக ஜெயாவும் ஆர்.எஸ்.எஸ்.சும் வெவ்வேறு அல்ல; ஜெயா ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக முகவர். உலகமயமாக்கல் மிகத் தீவிரமடைந்து வரும் அண்மைய ஆண்டுகளில், ஏகாதிபத்தியங்கள் முன்னெப்போதும் கண்டிராத வகையில் உலகின் மீதமிருக்கும் இயற்கை வளங்களை வெறி கொண்டு சுரண்டிவரும் நிலையில் அவற்றின் இந்தியத் தரகர்களான முதலாளிகள் அந்த வெறிக்கேற்ற ஒத்துழைப்பை அரசிடம் எதிபார்க்கின்றனர். பார்ப்பன, பனியா, மார்வாரி போன்ற மேல்சாதி வணிகக் கும்பல்களின் கூடாரமான ஆர்.எஸ்.எஸ். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தது; அதன் மூலம் தன் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டும் என்று நாக்கில் எச்சில் ஊற அலைந்தது. ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரதம் என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழை நாடுகளில் தனக்கும் தன் வணிக சாதிகளுக்கும் பொருளாதார ஆதிக்கமும் பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆதிக்கமும் பெறுவதாகும். இந்தப் பின்னணியிலேயே மக்களை முன்னிறுத்தி இந்தியத் தரகு முதலாளிகள் தன்னுடைய விசுவாச காங்கிரசு அரசைத் தூக்கியெறிந்தனர்.
பெரியார் என்கிற மாபெரும் ஆளுமையின் காரணமாக தமிழகத்தில் காலூன்றவே முடியாதிருந்த ஆர்.எஸ்.எஸ்., பாசிசக் கோமாளி எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்ததும் தன் அடித்தளத்தை நிறுவியது. பின் எம்.ஜி.ஆர்-ன் சாவுக்குப் பின் தமிழக பார்ப்பன கும்பல் ஆர்.எஸ்.எஸ்.சின் உதவியுடன் ஜெயாவைக் கொண்டு வந்தது. இந்தப் பார்ப்பன கும்பலும் ஆர்.எஸ்.எஸ்.சும் தான் ஜெயாவின் ஆதாரம்; தத்துவ அடித்தளம். எல்லாத் தடைகளையும் உடைத்து ஆர்.எஸ்.எஸ்-சின் கூடாரமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கூட்டணிப் பணியின் நோக்கம்.
இதற்காக ஜெயாவை அனைவருக்கும் பொதுவானவராக மதச்சார்பற்றவராக சாதிகளைக் கடந்தவராக பெண்களின் காவலராக ஏழைகளின் பாதுகாவலராக போராளியாக முன்னிறுத்த வேண்டும்; வலுவான அரசியல் ஆற்றலாக இருக்கும் கருணாநிதியை அரசியல் அரங்கில் இருந்தே அகற்ற வேண்டும். அதற்கு வரப்பிரசாதமாக அமைந்த 2G வழக்கை பயன்படுத்தி கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் குரல்வளையை நெறித்து அதன் இறுதி மூச்சை நிறுத்தி விட வேண்டும். இதற்கு முக்கியமான காரணம் பார்ப்பனியத்தின் நேர் எதிராக இருக்கும் திராவிட அரசியலின் மிச்ச சொச்சமாக கருணாநிதி இருப்பது தான். ஆரிய அரசியலுக்கு திராவிட அரசியலை ஒழித்துக் கட்டுவதே முன் நிபந்தனை.
திராவிடக் கருத்தியலுக்கு எதிராக பார்ப்பன மயமாக்கப்பட்ட தமிழினவாதத்தை ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இதற்கான முகவர்களாக பொய்க்கோ (வைகோ), அடிமைச் சீமான், ஈனமாறன் (பழ.நெடுமாறன்), பிணியருவி சனியன் (தமிழருவி மணியன்), தறுதலைப் பாண்டியன் (தா.பாண்டியன்) போன்றோரை - இதில் விடுபட்டோர் மன்னிக்கவும் - தம் பார்ப்பன மடங்களில் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளது. இதில் அனைவருக்கும் வெவ்வேறு பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பன அடிமைச் சீமான் மட்டும் சற்று பேராசையாக தானே முதல்வராகி விட வேண்டும் என்று தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தின் கனத்தின் ஊடாக நப்பாசையுடன் அலைகிறார்; அவருடைய பாத்திரத்தின் எல்லை எதுவென்று அவருடைய முதலாளிப் பண்டாரங்களால் தக்க நேரத்தில் அறிவு புகட்டப்பட்டு நறுக்கி வைக்கப்படுவார்.
ஜெயலலிதாவின் போராளி பாத்திரத்துக்குத் தோதாக ஈழப்போர் உச்சத்துக்கு வந்தது. பயிற்சியளிக்கப்பட்ட தமிழினக் கும்பல் ஜெயாவுக்கு ஈழத்தாய் வேடமிட்டு தமிழுலக மேடைக்கு அழைத்து வந்தது. அத்தமிழினக் கும்பல் துணை நடிகர்களாக வேடமிட்டன. ஆனால் ஜெயாவோ ஈழத்தாய் வேடத்தில் பொருந்த முடியாமல் திணறினார்; எனவே துணை நடிகர்கள் மிகக் கடுமையாக நடித்து ஜெயாவின் பாத்திரப் பொருத்தமின்மையை கச்சிதமாக மறைக்க முயன்றனர். இந்தப் பார்ப்பனக் கும்பலோ ஈழப்போரை இந்த பொம்மைகளை வைத்து சரியாகப் பயன்படுத்தி ஓர் இனத்தின் உயிர்ப் போராட்டத்தை அதன் வலியை அது உண்டாக்கிய தாக்கத்தை அதன் உணர்வை ஈவிரக்கமின்றி கபளீகரம் செய்தது. இவ்வாறு பீறிட்டெழுந்து இந்திய தேசியத்திற்கு சேதத்தை உண்டாக்கும் படி கருவாகி வந்து கொண்டிருந்த, தேசிய இன உணர்வை தட்டி எழுப்பக் கூடிய பண்புக் கூறுகளைக் கொண்டிருந்த தமிழுணர்வானது பார்ப்பன மயமாக்கப்பட்ட இந்து (இந்திய) தேசியத் தமிழுணர்வாய் புனிதப்படுத்தப்பட்டு ஜோதியில் கலக்க வைக்கப்பட்டது.
பார்ப்பன மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிற தளங்களிலும் தத்துவத் தளத்திலும் திராவிடத்தை கருவறுக்கும் திட்டங்களில் இறங்கின. ஆரிய மாயைக்கு எதிராக திராவிட மாயை; திராவிடத்தின் மதச்சார்பின்மையைத் தாக்கி அதன் ஆதரவு ஆற்றல்களான மதச் சிறுபான்மையினரை, நிறுவனமயமாக்கி பிரித்து ஜெயாவின் காலடியில் போடுவது; சிறு தெய்வங்கள், நாட்டுப்புற தெய்வங்கள் மற்றும் தமிழ் கடவுள்களை ஆரிய மயமாக்குவது; தமிழ்ப் பண்பாட்டை பார்ப்பன மயமாக்குவது; பெரியாரை மத நம்பிக்கைக்கு எதிரானவராகக் குறுக்கி அனைத்து மத பக்தர்களுக்கும் எதிரியாக நிறுத்துவது; இறுதியாக திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிய தமிழ் இனவாதத்தை முன்னிறுத்துவது; திராவிடத் தத்துவவியலின் மூல காரணமாகக் கருதப்படும் பெரியாரை தமிழின வாதத்துக் கெதிராக நிறுத்தி அதன் மூலம் தமிழர்களுக்கு எதிரியாக மாற்றுவது; மொத்தமாக பெரியாரை ஒழித்துக் கட்டுவது; இந்த வகை அடித்தளத்திலிருந்து கட்டப்படும் தமிழினவாதம் பார்ப்பனியத்தின் தமிழ்ப் பதிப்பாகவே இருக்கும் என்பதால் தமிழகத்தில் பார்ப்பன சாம்ராச்சியம் என்பது ஒரு எளிய இனிய பயணமாகவே இருக்கும் என்று இந்தப் பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ். கும்பல் கணக்கிட்டு திட்டமிட்டு வேலை செய்கிறது.
அக்கும்பல் ஒரு நீடித்த திட்டமிட்ட சீரான வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறது. இத்திட்டக் குழுவின் உறுப்பினரான ஜெயாவின் பணி இதுவரை மிகச் சிறப்பாக இருந்தாலும் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது; அவர் ஆட்சியில் இல்லாவிட்டால் இழப்பு அவர்களுக்குத் தான். எனவே அவர் சிறையில் இருப்பதை விட ஆட்சியில் இருப்பது தான் தேவை. ஒரு வேளை அவர்கள் நினைத்த வேகத்தில் ஜெயாவின் உதவியோடு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து விட்டால் அ.தி.மு.க.வில் ஜெயாவுக்குப் பின் யார் என்ற கேள்வி எழப்போவதில்லை.
உலகமய, தாராளமய மற்றும் தனியார்மயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் மோடிக்கு சற்றும் சளைத்தவரல்ல ஜெயா. இருவருமே பார்ப்பனிய பாசிஸ்டுகள். இந்த இரண்டு கொள்கைகளையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஜெயா விடுதலை அவசியமாகிறது. இதில் பணம் கொடுத்து மட்டும் தீர்ப்பு விலைக்கு வாங்கப்பட்டதாக குறுக்கி பார்க்கக் கூடாது. அந்தப் பார்வை பாசிஸ்டுகளின் செயல் திட்டங்களை புரிந்து கொள்ள முடியாமல் செய்வதோடு அவர்களுக்கெதிரான போராட்டங்களின் திசைவழி தெரியாமல் குருட்டுத்தனமாக இலக்கின்றி அலைய நேரிடும்; அது பார்ப்பன இந்து மதப் பாசிஸ்டுகள் பலம் பெறவே வழிவகுக்கும்.
லேபிள்கள்:
சொத்துக் குவிப்பு,
ஜெயலலிதா,
ஜெயா விடுதலை,
admk,
jeya,
Jeyalalitha
லேபிள்கள்:
உண்டியல்,
கடவுள் இல்லை,
கன்னியாஸ்திரி,
no god
வாழ்த்துகள் சகோதரிகளே!!
தோழியர்கள் செல்வி, பிரியாபாபு மற்றும்
ஓல்கா,எஸ்தர் பாரதி அவர்களுக்கு.
பல இன்னல்களை கடந்து தன்மீது
சுமத்தப்படும் சுமைகளையும் தாங்கி
வெற்றிகொடி நாட்டியுள்ள இந்த சுமுதாய
சிற்பிகளை வாழ்த்தாமல் இருக்க முடியாது.
திருநங்கையாக என்னால் வாழ முடியாத போதிலும்
ஒரு திருநங்கையின் உணர்வுகளை என்னால் உணர முடிந்தது
காவிபயங்கரவாதத்திற்கு எதிராக சரிநிகர் என்ற அமைப்பை தொடங்கி உணர்வாளர்கள் தங்கள் உணர்வுகளை பகிந்துகொண்ட போது அந்த நிகழ்வுக்கு தன்னுடைய பங்களிப்பையும் கொடுக்க வந்திருந்தார் தோழியர் "மருத்துவர் செல்வி" அவர்கள்.
நிகழ்ச்சி முடியும் போது தமிழகத்தில் எங்கோ ஒரு பகுதியில் இருந்து
தாய் தந்தையரால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திரனாளி திருநங்கை அந்த நிகழ்வுக்கு வந்திருந்து உதவி கோறினார்
என்னால் நடக்க முடியவில்லை, உடல்நிலையும் சரியில்லை என்று எங்கள் அனைவரையும் கலங்கவைத்துவிட்டார்.
கூட்டம் குடிந்து அனைவரும் சென்ற பிறகு
சில புரட்சிகர இயக்க தோழர்கள் எங்கள் தோழர்களோடு இவர் இருக்கடும் நீங்கள் இவரை இங்கிருந்து{எழும்பூர் இக்சாவில்} விருகம்பாக்கம் கொண்டுவந்து சேர்த்துவிடுங்கள் என்று சொல்லி அவருக்கு ஆட்டோ செலவுக்கு பணமும் கொடுத்துவிட்டு சென்றார்.
சிறிது நேரத்தில்
அந்த சகோதரி சிறுநீர் கழிக்க செல்லவேண்டும் என்றார்
அந்த அரங்கில் மாற்றுத்திரனாளிகளுக்கென்று கழிவரை இல்லை
அசுத்தம் நிறைந்த ஈரமான தரையில் கையை வைத்து தவழ்ந்துதான்
செல்லவேண்டும் கைக்கு பாலிதீல் பையை கொடுத்து இப்போதைக்கு சமாளித்துகொள் என்று தோழியர் செல்வி அவரை சிறுநீர்கழிக்க அழைத்துச்சென்றார் "நம் அம்மா நமக்கு துனைக்கு இருப்பது போல அப்போது நடந்துகொண்டார்" அந்த சகோதரி
அவர் வந்ததும் அவரை தூக்கி ஆட்டோவில் வைத்துக்கொண்டு
செல்வியும் புரட்சிகர அமைப்பின் பெண் தோழரும்{பெயர் தெரியவில்லை} நான் மற்றும் தோழர் தளபதி பாண்டியனும் உடன் சென்றோம்.
விருகம்பாக்கம் சென்றதும் குறிக்கிய பாதையில்
அந்த தோழர்களின் விடுதிக்கு செல்லவேண்டும் தோழியரால்
நடக்க முடியாது எனவே அவரை நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு உள்ளே சென்றோம். சென்றதும் அந்த வீட்டில் பல திருநங்கைகள் இருப்பதை கண்டோம் அவர்களை பார்த்தது அந்த தோழியருக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடன் இருக்கும் தோழியர்களிடம் அவரை பற்றி சொல்லிவிட்டு நாங்கள் வெளியே வந்தோம் அப்போது மணி சரியாக 2 மணி இருக்கும்.
நானும் தளபதி பாண்டியனும் புறப்பட தயாராக ஆனோம்
தோழியர் செல்வி முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது என்ன தோழர் என்று கேட்டோம் எனக்கு யாரும்வீடு தர மறுக்கிறார்கள் நான் இன்றுதான் ஒரு வீட்டுக்கு சென்றேன் இன்னும் முன்பணம் கூட கொடுக்கவில்லை இப்போது நேரம் ஆகிவிட்டது. இப்போது போய் வீட்டு ஓனரின் கதவை தட்டினால் என்னை உள்ளே விடமாட்டார் என்று அழாத குறையாக சொன்னார் நானும் தளபதி பாண்டியனும் அதை கேட்டு உடைந்து போனோம்.
அடுத்த நொடியே தன்னை சரி செய்துகொண்டு நடப்பது நடக்கட்டும் என்று வருகிறேன் என்று அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தார் தோழியர் "மருத்துவர் செல்வி"
அன்றைக்கு வலிகை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயனித்ததால்தான் இன்று சிகரத்தை தொட்டுள்ளார்.
இவரை போலதான் மற்ற மூன்று பேரும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள் அவர்களை போற்றுவோம் வாழ்த்துவோம்.
நன்றி "தமிழ் இந்து நாளிதழ்"
http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7443543.ece#comments
இது என்ன மாமா வேலையா..?
II சாமுவேல்: 12:11-ஆம் வசனம்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ நான் உன்வீட்டிலே பொல்லாப்பை எழுப்பப் பண்ணி, உன் கண்கள் பார்க்க , உன் ஸ்திரீயை எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்தில் உன் ஸ்திரீயுடனே சயனிப்பான் என்றிருக்கிறது.
ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்துவிட்டால், அவன் மனைவியை எடுத்து அடுத்தவனுக்குச் சயமனிக்கக் கொடுப்பதுதானா கர்த்தருக்கு வேலை...?
அதுவும் பட்டப்பகலில் அவன் கண்கள் பார்க்க (இந்தக் கர்த்தரும் பார்த்துக்கொண்டு) சயமனிக்கக் கொடுப்பாராமே! நீங்கள் என்மேல் கோபித்துப் பயனில்லை. இப்படிப்பட்ட கர்த்தரை வணங்குபவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லாமல் வேறு என்னதான் சொல்வது..? சிந்தியுங்கள் நண்பர்களே.
யார் கருப்புக் காக்கை...
பச்சைத் தமிழர் யார்....?
பச்சைப் பார்ப்பனர் யார்...?
ஆச்சாரியார் இரண்டு முறை முதல் அமைச்சராக இருந்தபோது ஓய்வு பெற வேண்டிய பார்ப்பனர்களை எல்லாம் தேடித் தேடிப் பார்த்து, பதவி நீட்டிப்ப செய்தார். ஓய்வு பெற்று "கிருஷ்ணா, ராமா" என்று பஜனையை பாடிக் கொண்டு சாய்வு நாற்காலியில் முழங்காலை அமுக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் முகவரிகளைத் தேடிச் சென்று இழுத்து வந்து அதிகார நாற்காலியில் அமர வைத்து அக்கிரகாரத்துக்கு "ஜே" போட்டார்.
ஆம்,ஆச்சாரியார் பச்சைப் பார்ப்பனராகவே பூணூல் தர்பாராகவே ஆட்சியை நடத்தி வந்தார்.
காமராஜர் ஆட்சிக்கு வந்ததும் அதனைத் தலைகீழாக மாற்றினார்.
தமிழர்களை உரிய இடத்தில் அமர்த்தினார். நெ.து.சுந்தரவடிவேலு போன்றோவர்களைக் கொண்டு வந்து கல்வித் துறையில் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியவர், ஓர் அப்பாதுரைத் தலைமைப் பொறியாளராக அமரச் செய்தார்.மிஸ் மரைக்காயா என்ற முஸ்லிம் பெண்மணியை மருத்துவத்துறையின் இயக்குநராக அமர்த்தினார்.
அந்த ஆத்திரத்தில்தான் ஆச்சாரியார் காமராஜரைக் கருப்புக் காக்கை என்றார். (காக்கை என்றாலே கருப்புதான்; பிறகு ஏன் கருப்புக் காக்கை என்று கூறியுள்ளார்...? அந்தக் கருப்பு என்பது வேறு ஒன்றும் அல்ல. கருப்புச் சட்டைக்காரர்-பெரியாரின் ஆசாமி என்று அடையாளம் காட்டவே) என்று கூறினார். அந்தக் கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் கொலை வெறியைத் தூண்டினார்.
(கதர்ச்சட்டைக்குள் கருப்புச்சட்டை என்று "கல்கி" கார்ட்டூன் போட்டதும் அர்த்தத்தில்தான் !) காமராஜர் வாய் மூடியாக- மவுன சாமியாராக இருந்தாரா..?
பதிலுக்குப் பத்தடி கொடுத்தார் . ஆச்சாரியாரின் ஆணவ மண்டையின் கபாலம் நொறுங்கும் வகையில் இடி முழக்கம் செய்தாரே!
"ஒருவனுக்கு நன்றாக கறி சாப்பாடு போட்டு வளர்க்கிறோம். இன்னோருத்தன் மூன்று நாள் பட்டினியில் கிடந்தவனாய் இருக்கிறான். இரண்டு பேரையும் சண்டைக்கு விட்டு, கறி சாப்பாடு சாப்பிட்டவன் ஜெயித்தால் அதற்குத் தகுதி - திறமை என்று பேரா?
பட்டினிக் கிடப்பவனுக்கும் அத்நெ கறி சாப்பாட்டைப் போடு , அப்புறம் சண்டைக்கு விட்டால் இரண்டு பேர் தகுதி-திறமையும் ஒன்றாகத் தானே இருக்கும்.
பறையன் டாக்டராக வந்து ஊசி போடுகிறான்.அவன் ஊசி போட்டதாலே எந்த எந்த நோயாளி செத்துப்போய் விட்டான்...?
அப்போ பறையனுக்கும் தகுதி வந்துவிட்டதா,இல்லையா..? தகுதி-திறமை என்பது உயந்த ஜாதிக்காரனிடமும்,இந்தப் பரம்பரை உத்தியோக ஆதிக்கக்காரனிடமும் தானா இருக்கிறது..?
இப்படி தகுதி - திறமை என்று கொஞ்ச நாளாகவா நீங்க ஏமாத்துறீன்க? நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டுகளாகவே ஏமாத்தி வருகிறீர்கள்!
*மந்திரம் தந்திரம் என்று சொல்லி ஏமாற்றி கொஞ்ச நாள் ஆதிக்கம் செலுத்தினீர்கள். இப்போது படிப்பு என்று சொல்லி ஏமாத்துகிறீர்கள். புத்தகம் படித்து விட்டால் தகுதி-திறமை வந்து விடுமா? இல்லை வந்து விட்டதாக அர்த்தமா? உன் திறமையும் எனக்குத் தெரியும். சொல்லிக் கொடுத்தவன் திறமையும் எனக்குத் தெரியும்!*
என்று காமராஜர் கர்ச்சித்தாரே?
(நூல் "தகுதி-திறமை'மோசடி!)
இந்த பச்சைத் தமிழர் காமராஜரை பார்த்துதான் அன்றைக்கு பார்ப்பன துக்ளக் ஏடுகேலி செய்தது
தமிழரில்
பச்சைத் தமிழர், சிவப்புத் தமிழர், மஞ்சள் தமிழர் உண்டா என்று.
பச்சைத் தமிழர் காமராஜர் பேச்சா தந்தை பெரியாரின் பேச்சா என்று அன்றைக்கே விடுதலையில் தலைப்புக் கொடுத்து செய்தி வெளியிட்டதே இதனால்தான் காமராஜர்
*பச்சைத் தமிழர்* - புரிகிறதா,"துக்ளக்'' வகையாறாக்களே.....?
பச்சைத் தமிழர் காமராஜர் பேசுகிறார்: – “எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. !”
பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவே லும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது. சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காம ராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத் த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்.
`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக் கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவ னால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படி யாகாது.
சாதாரண பள்ளிக்கூட படிப்புக் கே அவன் ஆடு, மாடு, கோழியெ ல்லாம் விக்க வேண்டியிருக்கு…! மேல்மட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க…! ஏழை வீட்டுப் பிள்ளை ங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்…” என் றார் காம ராஜர்.
உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந் து படிப்பவர்களில் நூற்றுக்கு அறு பது பேர், பிற்படுத்தப்பட்ட தாழ்த் தப்பட்ட மாணவர்கள்” என்றார். “அதைத்தானே நாம விரும்பினோ ம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராம மே மேல வந்திடுமில்லையா..
என்றார் காமராஜர். அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவு க்கும் காரணம் காமராசர் தான்… அவருக்குத்தான் தமிழன் கடன்பட் டிருக்கிறான்…!
அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையை யே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார். உடனே காமராஜர், “அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. அவர் சொல்றார் நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவருதானே…?
இது. 1952இல் ஆரம்பிச்ச பிரச்சனை யா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கற தாச்சே. தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெ ழுத்துன்னு சொல்லிட்டானே! இத ப்பத்தி யார் கவலைப்பட்டார்?” “பெரி யார் ஒருத்தர்தானே எல்லாத்தையும் தலையில் எடுத்துப் போட்டுகிட்டு பண்ணி கிட்டிருக்கார்.
அவரு மட்டும் இல்லேன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிரு க்கும்…? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந் திருக்கான்…! நம்மகிட்ட அதி காரம் இருக்கிறதாலே பெரியார் நென ச்ச காரியத்த ஏதோ கொஞ்சம் பண்ணிக் கொடுக் கிறோம்.
அவரு, எந்த அதிகாரத்தையும் கையில வச்சிக்காம ஊர், ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு வராரு.! அவராலேதான் நமக் கெல்லாம் பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.
“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் தந்தை பெரியாருக்கே காணிக்கை யாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு பூரித்துப்போனார்.
நன்றி – மாலைமலர்
*ஆரியத்தால் தமிழனுக்கு நேர்ந்த தீங்குகள்*
ஞா.தேவநேயப்பாவாணர் பேசுகிறார்.
பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரத் கல்வியும், நாகரிகமின்மை, தாய்மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன ஆரியத்தால் தமிழர்களுக்கு நேர்ந்த தீங்குகளாகும்.
ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.
பார்ப்பனர்கள் பாட்டுத் தொழிலை மேற்க்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்க்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப்புலவர் பிழைப்பும் கெட்டன.
தாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக்குலங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிரகார வழியாகச் செல்லக்கூடாதென்றும், மேலாடையணியக் கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில் இருந்து வருகிறது.
மேல் வகுப்பாரைக் கண்டவுடன் அய்ம்புலமும் ஒடுங்கி, அவர் ஏவல் வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்..?
பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்துகிடக்கின்றனர் கீழோர். மேனாட்டாருக்குச் சமையல் செய்யும் பறையர். மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.
"ஆரிய-திராவிடப் போர் தோன்றுதொட்டதாதல்"
ஆரிய -- திராவிடப் போர் இந்தியர்களுக்குள், முக்கியமாய்த் தமிழர்களுக்குள், பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்டதென்றும், அடிமைத் தமிழரான நீதிக்கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
ஆரிய -- திராவிடப் போர், ஆரியர் இந்தியாவில் கால் வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும்.
பிராமண மதத்திற்கு மாறாக பவுத்த மதத்தைத் தோற்றுவித்து புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே.
பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்து கொண்டேயிருந்தது.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவரது முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிப்பவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை நெடுகக் காணலாம்.
ஆதாரம்: ஓப்பியன் மொழி நூல் பக்கம் 65-66
வியாழன், 25 ஜூன், 2015
இந்து மதத்தில் சில ஏன் எதற்காக...?
இப்படி ஒரு புத்தகத்தை "ஆர்.பி.வி.மணியன்" என்பவர் எழுதி விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது
நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன் என்ற தலைப்பில்
இந்துக்கள் ஏன் நெற்றியில் மதக் குறியீடான அடையாளங்களை வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார்
சொல்கிறவர் அந்த குறியீட்டு பின்னனி கதைகளை
சொல்லியிருப்பார் என்று ஆவளோடு பக்கத்தை புரட்டி போட்டேன்
வழக்கம் போல காவிகள் எப்படி திசை திருப்புவார்களோ அப்படியே
நேராக இவர் வெள்ளையர்களை வைத்தே தொடங்குகிறார்.
நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன்...?
பக்கம் 11
"""""""""""சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்றிக்கு இட்டுக் கொள்வது
சிலருக்கு அநாகரீகமாகப் பட்டது.
ஆங்கிலேயர்கள் நம்மவர்கள் திருநீறு, திருமண் இட்டுக் கொள்வதை
{Caste Mark ஜாதி அடையாளம்} என்று கெட்டப் பெயர் தந்து தூக்கில் போடப் பார்த்தார்கள்.
வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே திருமண் இட்டுக் கொள்கிறவர்களிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள்
ஆகவே நாம் நெற்றிக்கு இட்டுக் கொள்வது "Caste Mark" அல்ல; மாறாக "Religious Mark"{சமய சின்னம்} ஆகும்.""""""""""""""
இந்த ஆர்.பி.வி.மணியன் என்பவர்தான் இந்த பக்கதில்
இந்த இட்டுக் கொள்வது ஜாதி அடையாளம் இல்லை அது வெள்ளையன் சூட்டுய பெயர் என்றார் அவரே இதே புத்தகத்தில்
பக்கம் 98ல் வடகலை தென்கலையினர் ஏன் நாமம் போடுகின்றனர் என்று சொல்கிறார் இங்கே இது #ஜாதிஅடையாளம் இல்லை என்கிறார்
அங்கே வடகலை,தென்கலையினர் குறியீட்டை பேசுகின்றார்
இங்கே ''''''வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர்''''''' என்று பேசுகிறவர் அங்கே இவர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று சொல்லமறுக்கிறார்.
1918 -19 ல் ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா என்று
நாமம் போடுவதில் ஒரு கலவரமே நடந்து அது நீதி மன்றம் வரை சென்றது உலகறிந்த செய்தி அந்த செய்தி இவர் படித்திருப்பார இல்லை தெரிந்து அந்த இழிவான காரியத்தை மறைத்திருப்பாரா...?
வடகலையினர் தென்கலையினரை பார்த்தால்
சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டும் என்று முட்டிக்கொண்டதெல்லாம் இந்து மத ஜாதி தீண்டாமை என்பதை மணியன் அறிந்தே தவிற்த்து இருக்கிறார்
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்
விபூதி பூசுவோர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்
தீண்டாமை எங்கே தொடங்குகிறது என்று கவனித்தீர்கள் என்றால் புரியும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று சொல்வார் இதற்கு சான்றுதான்
இந்த "So Called தீண்டாதார் "
இதுதான் புனிதமான இந்து மதத்தின் நிலை
மானமுள்ள தமிழன் நெற்றியில் பொட்டு வைப்பானா...?
"புத்தகம் பற்றிய விமர்ச்சனம் தொடரும்"
இப்படி ஒரு புத்தகத்தை "ஆர்.பி.வி.மணியன்" என்பவர் எழுதி விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது
நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன் என்ற தலைப்பில்
இந்துக்கள் ஏன் நெற்றியில் மதக் குறியீடான அடையாளங்களை வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார்
சொல்கிறவர் அந்த குறியீட்டு பின்னனி கதைகளை
சொல்லியிருப்பார் என்று ஆவளோடு பக்கத்தை புரட்டி போட்டேன்
வழக்கம் போல காவிகள் எப்படி திசை திருப்புவார்களோ அப்படியே
நேராக இவர் வெள்ளையர்களை வைத்தே தொடங்குகிறார்.
நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன்...?
பக்கம் 11
"""""""""""சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்றிக்கு இட்டுக் கொள்வது
சிலருக்கு அநாகரீகமாகப் பட்டது.
ஆங்கிலேயர்கள் நம்மவர்கள் திருநீறு, திருமண் இட்டுக் கொள்வதை
{Caste Mark ஜாதி அடையாளம்} என்று கெட்டப் பெயர் தந்து தூக்கில் போடப் பார்த்தார்கள்.
வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே திருமண் இட்டுக் கொள்கிறவர்களிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள்
ஆகவே நாம் நெற்றிக்கு இட்டுக் கொள்வது "Caste Mark" அல்ல; மாறாக "Religious Mark"{சமய சின்னம்} ஆகும்.""""""""""""""
இந்த ஆர்.பி.வி.மணியன் என்பவர்தான் இந்த பக்கதில்
இந்த இட்டுக் கொள்வது ஜாதி அடையாளம் இல்லை அது வெள்ளையன் சூட்டுய பெயர் என்றார் அவரே இதே புத்தகத்தில்
பக்கம் 98ல் வடகலை தென்கலையினர் ஏன் நாமம் போடுகின்றனர் என்று சொல்கிறார் இங்கே இது #ஜாதிஅடையாளம் இல்லை என்கிறார்
அங்கே வடகலை,தென்கலையினர் குறியீட்டை பேசுகின்றார்
இங்கே ''''''வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர்''''''' என்று பேசுகிறவர் அங்கே இவர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று சொல்லமறுக்கிறார்.
1918 -19 ல் ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா என்று
நாமம் போடுவதில் ஒரு கலவரமே நடந்து அது நீதி மன்றம் வரை சென்றது உலகறிந்த செய்தி அந்த செய்தி இவர் படித்திருப்பார இல்லை தெரிந்து அந்த இழிவான காரியத்தை மறைத்திருப்பாரா...?
வடகலையினர் தென்கலையினரை பார்த்தால்
சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டும் என்று முட்டிக்கொண்டதெல்லாம் இந்து மத ஜாதி தீண்டாமை என்பதை மணியன் அறிந்தே தவிற்த்து இருக்கிறார்
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்
விபூதி பூசுவோர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்
தீண்டாமை எங்கே தொடங்குகிறது என்று கவனித்தீர்கள் என்றால் புரியும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று சொல்வார் இதற்கு சான்றுதான்
இந்த "So Called தீண்டாதார் "
இதுதான் புனிதமான இந்து மதத்தின் நிலை
மானமுள்ள தமிழன் நெற்றியில் பொட்டு வைப்பானா...?
"புத்தகம் பற்றிய விமர்ச்சனம் தொடரும்"
வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்.
பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.
அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில்
அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர்.
இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால
- தந்தை பெரியார்(விடுதலை-07.06.196
புதன், 24 ஜூன், 2015
தாழ்த்தப்பட்டவர் முதல்வர் ஆக முடியுமா!!
பறை பல்லு பட்டம் போகாமல் உன் சூத்திர பட்டம்
போகாது என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் மூத்திர சட்டியோடு சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி
படித்து பட்டம் பெற்று தனக்கென வாழாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் கடைசி வரை பாடுபட்டது இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அதை யாராலும் மறுக்க முடியாது.
அண்டி பிழைக்க வந்த கூட்டம் மதம் என்னும் அபினை மக்களுக்கு கொடுத்து கடவுள் என்னும் பொம்மையை விளையாட கொடுத்து
அடிமைகளை அடையாளம் காண அவர்களுக்கு மத குறியீடிட்டு
தோலுக்கு ஒரு வர்ணத்தை சொல்லி ஊருக்கு ஒரு ஜாதி அடையாளம் கொடுத்து மொத்தமாக நாம் இந்துகள் என்று சொன்னான்
பறை பல்லு பட்டம் போகாமல் உன் சூத்திர பட்டம்
போகாது என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் மூத்திர சட்டியோடு சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி
படித்து பட்டம் பெற்று தனக்கென வாழாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் கடைசி வரை பாடுபட்டது இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அதை யாராலும் மறுக்க முடியாது.
அண்டி பிழைக்க வந்த கூட்டம் மதம் என்னும் அபினை மக்களுக்கு கொடுத்து கடவுள் என்னும் பொம்மையை விளையாட கொடுத்து
அடிமைகளை அடையாளம் காண அவர்களுக்கு மத குறியீடிட்டு
தோலுக்கு ஒரு வர்ணத்தை சொல்லி ஊருக்கு ஒரு ஜாதி அடையாளம் கொடுத்து மொத்தமாக நாம் இந்துகள் என்று சொன்னான்
பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தாலும்
ஒவ்வொரு வர்ணத்திற்க்கு ஏற்றப் பெயர்தான் வைக்க வேண்டும் என்கிறது
இந்து மநுதர்மம்.
பெற்ற குழந்தைக்கு ஐந்து வயது ஆனால் பள்ளியில்
சேர்க்க நினைத்தால் குலத்தொழிலை கற்றுக்கொடு என்கிறது இந்து
மத
மநுதர்மம். மீறி படிக்க வைத்தால் நாக்கை அறு காதால் கேட்டால்
“காதில் ஈயத்தை காயிச்சி ஊற்று” என்கிறது இந்து மத மநுதர்மம்
ஆரியப் பார்ப்பானுக்கு பணிவிடை செய்வதே இம் மண்ணின் மைந்தர்களின்
பணி என்கிறது இந்து மத மநுதர்மம்.
இந்த மண்ணில் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு அதிகார பதவிக்கு
போவதென்றால் அதற்க்காக பெரும் போராட்டத்தையும் உயிர் பலியையும்
கொடுத்தே அந்த அதிகாரத்தை நாம் அடைய முடிகிறது, இன்றைக்கும்
சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒரு சிலர் அடக்க நினைத்தால்
அப்போது ஏற்ப்படும் அச்சம் வண்கொடுமை சட்டம் உள்ளது அது நம்மை
தண்டிக்கும் என்ற பயவுணர்வு உள்ளதாலேயே சில குற்றங்கள் இந்த
சட்டத்தால்
குறைந்திருக்கின்றது.
ஆண்டாண்டு காலமாக கடும் போராட்டத்தை நடத்திதான் பெற்றோம் இந்த
உரிமைகளை தோல் சீலை போராட்டம்,கோயில் நுழைவு போராட்டம்,இந்திய சட்ட எரிப்பு போராட்டம்,சாஸ்திரம்
எரிப்பு போராட்டம், என பல போராட்டங்களை செய்து ரோட்டில் நடமாட ஆரம்பித்தோம்.
கையில் இருந்த செருப்பு காலில் போட்டு நடந்தோம்
கக்கத்தில் இருந்த துண்டை தோலில் போட்டு நடந்தோம்
நுழையவே முடியாத கோயிலில் தன் பிள்ளைகள் பெயரில்
அர்ச்சனை செய்தோம்
நாடக கொட்டைகையில் “பஞ்சமனுக்கு இடமில்லை” என்ற நுழைவு சீட்டு
இருந்த
நாட்டில் நாடக மேடையே திராவிடன் கையில் வந்தது குளிர்சாதன வசதிகளோடு
இன்று நாடகத்தை பார்த்து ரசிக்கின்றோம்.
இப்படி பல நிலைகள் இந்த மண்ணில் தோற்றிவித்து தோற்க்கடிக்கப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தை கொண்டுவந்து ஒரு மகத்தான திராவிடர் நூற்றாண்டை
கடந்துவிட்டோம் ஆயினும் நாம் நம் நிலையை இன்னும் வேகபடுத்த வேண்டும் எந்த தமிழனை தொட்டால்
தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னார்களோ அவர்களை போராடி போராடி அரசு அதிகாரத்தில்
அமர்த்திவிட்டோம். இனி
ஆட்சி அதிகாரம் ஒன்று இருக்கிறது அதை நாம் கையில் எடுக்க வேண்டும்
1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும்
போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.
ஏற்க்கனவே “தனி தொகுதி” “தனி ஓட்டுரிமை” என்று புரட்சியாளர்
அம்பேத்கர் முன் வைத்த கோரிக்கையை காந்தியின் “வஞ்சகத்தால் துரோகத்தால்“ அவை நிறைவேறாமல்
போனது ஒரு காந்தியின் உயிரை விட ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் பெரிது என்று
அப்போது அண்ணல் அம்பேத்கருக்கு தந்தி அனுப்பி அறிவுரை கூறிய
“அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின்” அந்த வார்த்தைகள் அளப்பறியாதது
அதன் நோக்கம் வியத்தகு மாபெரும் போராட்ட வடிவம் இந்த நாட்டின்
மகாத்மா என்று போற்றக்கூடிய ஒரு தலைவரையே வேண்டாம் தாழ்த்தப்பட்ட மக்களின் “உயிரை”
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எந்த “தலைவரும்” சிந்திக்காத சிந்தனையை ஈரோட்டு
மூலையில் உதிர்த்துள்ளது அவர் விட்டுச் சென்ற அந்த பணியைதான் நாம் இன்று போராட்ட வடிவில்
எடுத்துச் செல்லவேண்டும்
தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அதிகாரியாக வரவேண்டும் என்றால்
அதற்க்காக இடஒடுகீடும் அரசின் ஆணையும் தேவை. இப்படி வந்தால்
மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் இடைநிலை ஜாதியினரோ ஆதிக்க ஜாதியினரோ
ஆரியப் பார்ப்பனியமோ அவர்களை நேரடியாக இவர்கள்தான் எங்களுக்கு அதிகாரியாக வரவேண்டும்
என்று கேட்பதில்லை இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஆரியப் பார்ப்பனியர்கள் 1938ல்
கும்பகோணம் நகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டார்கள் அதில் எங்கள் அக்ரஹாரத்தில் “மலம்”
அல்ல தாழ்த்தப்பட்டவர்கள் வர கூடாது என்றும் அதற்கு பதிலாக இடைநிலை ஜாதியினர்தான் வரவேண்டும்
என்று
தங்களுடைய ஜாதி தீண்டாமையை அரசு தீர்மானமாக போட்டு தங்கள் ஜாதிவெறியை
உறுதிபடுத்திக்கொண்டார்கள்
நாம் இந்த மக்களிடமா ஒரு தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்க கோரிக்கை
வைக்க முடியும்…?
மநுதர்ம அதிகாரத்தை கையில் வைத்து நம்மை தீண்டத்தகாதவன் என்று
கொள்கிறானோ அது போல அரசு அதிகாரத்தில் நமக்கென்று உரிமையை பெற்று அந்த ஆதிக்க பார்ப்பனிய
ஜாதிவெறி கூட்டத்தை ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆளவேண்டும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
தமிழகத்தில் “தனி” தொகுதிகள் 46 உள்ளது இதில் தாழ்த்தப்பட்டவர்கள்தான்
சில இடத்தில் மலைவாழ் மக்கள்தான் போட்டியிட முடியும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதே மக்கள் முதல்வராக முடியுமா என்றால் முடியாது வெறும் 46 தொகுதிகளை வைத்து அதிகாரத்தை
பிடிக்க முடியாது ஆனால் ஆட்சியில்
“சுய உரிமை” கேட்கலாம்!!! 46 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட
வேட்ப்பாளர்களில் ஒருவருக்கு ஆட்சி அமைக்க போகிற அய்ந்தாண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள்
தாழ்த்தப்பட்டவர்தான் முதல்வராக இருக்க சட்டம் இயற்றவேண்டும்
அப்படி சட்டம் இயற்றினால் மட்டுமே ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக முடியும்.
-செல்வேந்திரன் கு-
24/06/2015.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















