*ஆரியத்தால் தமிழனுக்கு நேர்ந்த தீங்குகள்*
ஞா.தேவநேயப்பாவாணர் பேசுகிறார்.
பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரத் கல்வியும், நாகரிகமின்மை, தாய்மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன ஆரியத்தால் தமிழர்களுக்கு நேர்ந்த தீங்குகளாகும்.
ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.
பார்ப்பனர்கள் பாட்டுத் தொழிலை மேற்க்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்க்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப்புலவர் பிழைப்பும் கெட்டன.
தாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக்குலங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிரகார வழியாகச் செல்லக்கூடாதென்றும், மேலாடையணியக் கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில் இருந்து வருகிறது.
மேல் வகுப்பாரைக் கண்டவுடன் அய்ம்புலமும் ஒடுங்கி, அவர் ஏவல் வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்..?
பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்துகிடக்கின்றனர் கீழோர். மேனாட்டாருக்குச் சமையல் செய்யும் பறையர். மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.
"ஆரிய-திராவிடப் போர் தோன்றுதொட்டதாதல்"
ஆரிய -- திராவிடப் போர் இந்தியர்களுக்குள், முக்கியமாய்த் தமிழர்களுக்குள், பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்டதென்றும், அடிமைத் தமிழரான நீதிக்கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
ஆரிய -- திராவிடப் போர், ஆரியர் இந்தியாவில் கால் வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும்.
பிராமண மதத்திற்கு மாறாக பவுத்த மதத்தைத் தோற்றுவித்து புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே.
பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்து கொண்டேயிருந்தது.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவரது முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிப்பவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை நெடுகக் காணலாம்.
ஆதாரம்: ஓப்பியன் மொழி நூல் பக்கம் 65-66

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக