வியாழன், 23 ஜூலை, 2015





கன்னடனும்,தெலுங்கனும்,
மலையாளியும் எங்களை
திராவிடனாக பார்க்கவில்லை
எனவே நாங்கள் "திராவிடனில்லை"
-போலித் தமிழ்தேசியம்-

ஈழத் தமிழனுக்காக போராடும் எந்த தமிழனும்
உள்ளூர் தமிழன் ஜாதி வெறியால் கொல்லப்படும்போது
போராடவில்லை,ஜாதி அடையாளம்தான் தமிழனின்
அடையாளம் என்றால்
நாங்கள்"தமிழனே இல்லை"




தமிழ் கடவுள் முருகன் என்றால்
தமிழ் கடவுளின் துணைவியாரும் தமிழ் பெண் கடவுள்தானே...?

பழனி போகும் அரோகரா கூட்டம்
போகும் வழியில் இந்த கதைகளையும் படித்து செல்லுங்கள்

வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டு இருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் பிரபலமானது. சமிஸ்கிருத நூல்களில் ஸ்கந்தனைப் பற்றிக் கூறும்போது அவரை ஒரு பிரும்மச்சாரி அல்லது தேவக் கடவுளான தேவசேனாவை (தெய்வானை) மணந்தவர் என்று மட்டுமே கூறுகின்றது. அதற்கு மாறாக பல தமிழ் நூல்களில் வள்ளியே முருகனின் கணவர் என்று கூறி வந்துள்ளது.

இது பல காலமாக திராவிடர்களினால் நம்பப்பட்டு வந்தக் கதை ஆகும். பண்டைய இன தமிழ் மக்கள் இதுதான் உண்மை என நம்புவதற்குக் காரணம் 1350 ஆம் ஆண்டில் காஞ்சீபுரத்தில் இயற்றியதாகக் கூறப்படும் குச்சியப்பா என்பவர் எழுதி உள்ள கந்த புராணத்தின் 267 செய்யுளில் காணப்படும் கடைசி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலம் என்பதே. அது என்ன?

தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை. அந்த மலையின் அடிவாரத்தில்தான் நம்பி என்ற வேடன் இருந்தான். அவனுக்குப் பிறந்த அனைத்துக் குழைந்தைகளுமே ஆண் குழந்தைகளாக இருந்தன. அதனால் அவன் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருந்தான். அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி எனும் துறவி இருந்தார். ஒருநாள் அவர் எதிரில் அழகான அரபு தேசத்து மான் ஒன்று ஓடியது. அதன் உடல் அழகைக் கண்டு காம இச்சைக் கொண்டு அவர் அதைப் பார்க்க, துறவி பார்த்த காமக்கண்ணினால் அந்த மான் கர்ப்பம் அடைந்தது ( துறவிகள் பார்வை மூலமே காமத்தை செலுத்த முடியும் என்பது ஒரு நம்பிக்கை.

நமது இதிகாசங்களில் பல சம்பவங்கள் அவ்வாறு உள்ளன. இது என்னுடைய செய்தி - சாந்திப்பிரியா). இவ்வாறாக கர்ப்பம் அடைந்த மான் காலப்போக்கில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தப் பின் அதை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டது. ஒரு நாள் அந்த இடத்தின் அருகில் கிழங்குகளை எடுக்க வந்த வேடவர் பெண்கள் அந்தக் குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை எடுத்துக் கொண்டு போய் வேடர்களின் தலைவரான நம்பியிடம் கொடுக்க அந்த தம்பதியினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து அந்தக் குழந்தையை தம் குழந்தையாகவே வளர்க்கலாயினர். அதற்கு வள்ளி எனப் பெயர் சூட்டினார்கள்.

வள்ளிக்கு பன்னிரண்டு வயதானபோது வேடர் குல வழக்கப்படி அவளை நெல் கதிர்கள் பயிரிடப்பட்டு இருந்த வயலுக்குச் சென்று அங்கு உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தப் பரணில் அமர்ந்து கொண்டு நெற் கதிர்களை பறித்து உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் துரத்தும் பணியில் அமர்த்தினார்கள். அப்போது ஒரு நாள் அங்கு எதேற்சையாக வந்த நாரதர் அவளது அழகைக் கண்டு வியந்து, உடனே தணிகை மலைக்கு கிளம்பிச் சென்று முருகரிடம் அவள் அழகை பற்றி விவரித்தார். அது மட்டும் அல்ல வேடவ இனத்தினரும், வள்ளியும் அவர் மீது (முருகன் எனும் கடவுள் மீது) வைத்து இருந்த பக்தியைக் குறித்துப் பேசினார்.

அதைக் கேட்ட முருகனும் தன் உருவை ஒரு வேடர் போல மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு சென்று வள்ளியுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு ஆவலுடன் நெருங்கிப் பழகி அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார்.

ஒருநாள் எப்போதும் போல முருகன் வள்ளியை சந்திக்கச் சென்றபோது, வேடன் நம்பி மாவுத் தூள், தேன், வள்ளிக் கிழங்கு, மாம்பழம் மற்றும் காட்டுப் பசுவின் பால் முதலிய உணவைக் கொண்டு வந்தான். தூரத்தில் இருந்தே அவன் வருவதைக் கண்ட முருகன் உடனே தன்னை ஒரு மரம் போல உரு மாற்றிக் கொண்டார். உணவை வல்லிக்குத் தந்தப் பின் நம்பியும் மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்றப் பின் மீண்டும் தன்னை தன் உருவை வேடனாக மாற்றிக் கொண்ட முருகன் வள்ளியிடம் சென்று தான் அவளை தான் காதலிப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட வள்ளி திடுக்கிட்டுப் போய் தலை குனிந்தபடிக் 'கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு வேடவப் பெண்ணை அவர் விரும்புவது முறை அல்ல' என்றாள்.

அப்போது தூரத்தில் பாடல்களைப் பாடிக்க் கொண்டும் நாட்டியம் ஆடிக் கொண்டு வந்து கொண்டு இருந்த கும்பலைக் கண்டு பயந்து போனவள் ' வந்து கொண்டு இருப்பவர்கள் வேடர்கள், கோபக்காரர்கள், உடனே சென்று விடுங்கள்' என்று முருகனிடம் கூற உடனே முருகனும் தன்னை ஒரு சாமியார் போன்ற ஒரு வயதான கிழவர் உருவில் மாற்றிக் கொண்டார். வந்தவர்களும் அவரை ஒரு சிவனடியார் என நினைத்து அவரை வணங்கிவிட்டுச் சென்று விட்டார்கள்.

Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl
Murugan assumed the form of a hunter and, as soon as he arrived at Valli's field, he addressed the lovely girl.
அவர்கள் சென்றப் பின் அவர் வள்ளியிடம் தனக்கு தேனும், தினையும் கலந்த உணவை தருமாறுக் கேட்க அவளும் அவருக்கு அதை தந்தாள். அவர் அதை உண்டதும் பக்கத்தில் இருந்த ஒரு குளத்தின் அருகில் அவளை அழைத்துக் கொண்டு சென்று தன் இரு கைகளினாலும் தண்ணீரை எடுத்துக் கொடுத்து அவளைக் குடிக்கச் சொன்னார். 'தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தனது காதல் பசியையும் தீர்க்க வேண்டும்' என்று அவளிடம் கேட்டதும், அவளோ தனக்கு நேரமாகி விட்டது எனக் கூறி விட்டு வயலுக்குச் ஓடிச் சென்று விட்டாள். அதனால் முருகனும் தனது சகோதரர் வினாயகரை அழைத்து ஒரு யானை உருவில் சென்று அவள் பின்னால் நிற்குமாறு கூறினார்.

திடீர் என ஒரு யானை தன் பின்னால் வந்து நிற்பதைக் கண்ட வள்ளி பயந்து அலறிக் கொண்டே முருகன் அருகில் ஓடிச் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள அவரும் அவளை தன் உடலோடு அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்றப் பின் அவள் முன்னால் தன்னுடைய உண்மை உருவமான ஆறு தலைகள், பன்னிரண்டு கரங்களைக் காட்டியபடி மயில் மீது அமர்ந்து கொண்டு நின்றார். தான் விரும்பியக் கடவுளே தன் எதிரில் வந்து நின்றதைக் கண்டு மனம் மகிழ்ந்த வள்ளியும், தானும் திருமாலின் மகளே என்றக் கதையையும் கூறினாள்.

Old rogue Murugan
வள்ளியுடன் வயலுக்கு வந்திருந்த தோழியோ இத்தனை நேரமாகியும் குலத்துக்குச் சென்றவள் இன்னும் வரவில்லையே என பயந்து போய் நின்று இருக்க அங்கு வந்த வள்ளியிடம் அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். வள்ளியும் எதோ சால்ஜாப்பைக் கூறி விட்டு உண்மையில் நடந்த கதையை மறைத்தாள்.

அவளைத் தொடர்ந்து அங்கு வேடன் உருவில் வந்த முருகனின் கண்களும், வள்ளியின் கண்களும் சங்கமித்ததைக் கண்டவள் அந்த வேடனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறுக் கூறினாள். ஆனால் வேடன் உருவில் இருந்த முருகனோ தன்னுடையக் காதலை அவளிடம் எடுத்துக் கூறி அவர்கள் காதலுக்கு உதவியாக இருக்க அவளது துணையும் நாடினார். தேவைபட்டால் தனது பொய்க்கால் குதிரையுடன் நடனம் ஆடுபவன் போல அவர்களது கிராமத்துக்கு தான் வந்து விட்டுப் போவதாகவும் கூறினார். வள்ளியின் தோழியும் அதற்கு இணங்கினாள். அறுவடைக் காலமும் முடிந்தது. இனி தன்னால் முருகனைக் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்ட வள்ளியும் மனபாரத்துடன் தனது கிராமத்துக்கு கிளம்பிச் சென்றாள். அவள் திருட்டுத் தனமாக நடத்திக் கொண்டு வந்த காதல் ஒரு முடிவிற்கு வந்தது. அவளுடைய வளர்ப்புத் தாயார் அவளது முக வாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள்.

மலைப் பிரதேசத்தில் அவள் இருந்தபோது தீய ஆவி ஏதும் அவளைப் பிடித்து விட்டதா என்பதைக் கண்டறிய முருகனுக்கு பூஜை செய்து பரிகாரம் காண ஜோதிடர்களை அணுகினாள். அதற்கு இடையில் மீண்டும் வயலுக்குச் சென்று வள்ளியைத் தேடிய முருகன் அங்கு அவளைக் காணாததினால், அவளது தோழியின் உதவியைக் கொண்டு அவளைக் கண்டு பிடித்துப் பார்த்தப் பின் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

மறு நாள் வள்ளியைக் காணாத வேடத் தலைவனான நம்பி கைதேர்ந்த வேடர்களை அனுப்பி அவளை தேடிக் கண்டு பிடிக்குமாறுக் கூறினான். அவர்களும் அவளை பல இடங்களுக்கும் சென்று தேடி விட்டு முடிவாக அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த முருகனைக் கண்டு பிடித்து விட்டு அவர் மீது அம்புகளை வீசினார்கள். ஆனால் அவரது சேவல் எழுப்பிய கர்ஜனையினால் அவர்கள் அனைவரும் மடிந்து விழுந்தார்கள். அவர்கள் மடிந்து விழுந்ததைக் கண்ட வள்ளியும் அழுது புலம்ப முருகனும் அவளுக்கு ஆறுதல் கூறி அவளை தேற்றி அழைத்துக் கொண்டு சென்றார். வழியில் அவர்களைக் கண்ட நாரதர் முருகனிடம் ' அவர் செய்தது சரி அல்ல என்றும், அவளை அவளது பெற்றோர்களிடம் கூறி விட்டே அழைத்து வந்திருக்க வேண்டும்' என்று அறிவுறுத்த முருகனும் இறந்து போன வேடர்களை உயிர் பிழைக்க வைத்து அவர்களுக்கும் தனது சுய உருவைக் காட்டினார்.

அவர்களும் அவரை வணங்கித் துதித்தப் பின் தம்முடைய கிராமத்துக்கு அவர் வந்து தங்களுடைய இன வழக்கப்படி அவளை அவர் மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள அவர்களுடன் அவர் கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து புலித்தோலை பரிசாகக் கொடுத்தார்கள். நாரதர் முன்னிலையில் முருகனின் கரங்களில் வள்ளியின் கரங்களை அவளது வளர்ப்புத் தந்தையான வேடன் நம்பி வைக்க அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக கருதப்பட்டது. அங்கிருந்து கிளம்பிச் சென்ற முருகன் சில நாட்கள் திருத்தணியில் வாழ்ந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி ஸகந்தகிரிக்குச் செல்ல அங்கு வள்ளியையும், முருகனையும் அவரது முதல் மனைவி தெய்வானை அன்புடன் வரவேற்றாள்.

இந்த உணர்ச்சியைத் தூண்டும் கதையின் ஒவ்வொரு வரிகளுமே பண்டைய காலத்தைய தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் விதத்திலேயே அமைந்து உள்ளது தெரியும். இருவரும் இணைந்த இது ஒரு அற்புதமான காவியம். கதாநாயகி மலைவாழ் மக்களிடையே பிறக்கின்றாள், பன்னிரண்டு வயதில் பரண் மீது அமர்ந்து கொண்டு வயல்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கின்றாள், அங்குதான் கடவுளின், அதாவது காதலனின் சந்திப்பும் கள்ளத்தனமான உறவும் துவங்க அதற்கு அவளுடைய தோழி உதவி செய்கிறாள், பொய்க்கால் குதிரையின் ஆட்டம், காதலின் பிரிவினால் வள்ளி அடைந்த சோகம், வள்ளியின் தாயார் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை செய்தது, வேலனின் உக்கிரத் தாண்டவம், முருகனையே வேண்டிக் கொண்டு தீய ஆவியை விரட்டச் செய்த ஏற்பாடுகள், காதலர்கள் ஓடி விட்ட சம்பவம் என அனைத்துமே தமிழர்கள் பாணியிலேயே அமைந்து உள்ளது.

தெய்வ நம்பிக்கையின் கீழ் அமைந்து உள்ள அபூர்வமான ஒரு கதை ஒரு தெய்வத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், அந்தக் கதையின் கருவை நியாயப்படுத்தும் விதத்திலும் நன்கு அமைந்து உள்ளது என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் தெய்வத்தின் அற்புதமான செயல்களைக் கூட சமூகத்தின் மன மாற்றத்துக்கு ஏற்ப வரலாற்று சிறப்பு மிக்க அற்புதமான கதையாக எழுதப்பட்டு உள்ளது.

Old Man Murugan 'saves' Valli from rogue elephant Ganapati
At that moment, Murugan invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the elderly ascetic for protection. Painting from Tiruttani Devasthanam.
வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த தெய்வத்தின் கதையை படிப்படியாக ஆராய்ந்து சரியான முறையில் விளக்கிக் கூறுவதும் அவசியம்.

வள்ளி

வள்ளி என்ற பெயர் திராவிடர்களின் வரலாற்றில் இருந்து வந்தது என்பது தெளிவு. பழங்காலப் பழக்கத்தின்படி வள்ளி என்றப பெயர் வள்ளிச் செடியில் இருந்தே வந்துள்ளது. இது மலை வாழ் மக்களின் மொழியான தா. மா. கா. கோட மற்றும் தீ என்பதில் இருந்தே வந்துள்ளது. அந்தச் செடியின் மேல்புறத்தில் கிளைகள் படர்ந்து இருக்க கீழே நிலத்தடியில் பெருத்து வளரும் வள்ளிக் கிழங்கின் செடி பாழடைந்த பூமியில் வளரும் ஒன்று. இது பற்றிய செய்தி கி .பி 140 - 200 ரில் கபிலர் வாழ்ந்த குறிஞ்சியில் உள்ள குறிஞ்சிப் பட்டு என்றப பகுதியில் வளரும் 99 விதமான செடி கொடிகளின் பெயர்களில் உள்ளது.

பண்டைய தமிழ் நூல்களில் அந்த கிழங்குச் செடியின் பெயரில் அமைந்து இருந்த வள்ளி என்றப பெயர் 18 இடங்களில் கூறப்பட்டு உள்ளது. இது நிச்சயமாக திராவிட இயக்க நூல்களில் இருந்தே வந்திருக்க வேண்டும். ஏன் எனில் ஆர்ய வரலாற்றைக் குறிப்பிடும் சம்ஸ்கிருத மொழி நூல்களில் வெகு காலத்துக்குப் பின்னர்தான் வள்ளி எனும் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புராணக் கதையின்படி வள்ளிக் கிழங்கை தோண்டி எடுத்து கொண்டு இருந்தபோது குழந்தை கிடைத்ததினால் அவளுக்கு வள்ளி என்ற பெயரினை வைத்தார்கள். வள்ளிச் செடியைப் பற்றிய செய்தி அகம் 52.1 மற்றும் 286.2, புறம் 316.9, நார் 269.7 மற்றும் பரிபா 21.10 லும் , வள்ளிக் கிழங்கு பற்றி புக் 109.6 மற்றும் கல 39.12 லும் என்குர் 250 முக்கிய செய்தியாகக் கூறப்பட்டு இருந்தாலும் வள்ளிச் செடி பற்றியும் மேலும் முருகன் வழிபாடு பற்றியும் கூறப்பட்டு உள்ளன. ஆறாம் நூற்றாண்டு மற்றும் பக்தி நெறிகள் தோன்றப்படும் காலத்துக்கு முன்பாக எழுதப்பட்டு உள்ள ஏழு நூல்களில்தான் வள்ளி என்பவள் முருகனின் காதலி என்றும் அவளே அவருடைய மனைவி என்றும் கூறப்பட்டு உள்ளது. அவர்களைப் பற்றியக் குறிப்பு நாரா 82.4, திரு முருக 102, பராப் 8.69, 9.8, 9.67 மற்றும் 14.22 லும் சிலப் 24.3 போன்றவற்றில் உள்ளன.

இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த நாரினை 82.4 என்ற மிகப் பழமையான தமிழ் நூலில் குறிஞ்சி என்ற நூலில் அஹம் என்ற பாடலில் உள்ள வரிகள் இவை - 'நீயோ என்னுள் வருதியோ, நலனடக்கோடிச்சி முருகுபுணர்ந்து இயன்ற வள்ளிபோல'. இதன் அர்த்தம் என்ன என்றால் 'ஹே..... பெண்ணே அழகு சொட்டும் மலைப் பெண்ணான நீ முருகனிடம் மகிழ்ச்சியோடு சென்ற வள்ளி போல என்னிடம் வருவாயா' என்பதே. பாலுணர்வை தூண்டும் வகையில் கதாநாயகன் அந்தப் பெண்ணை தன்னுடன் புணரும்படி -முருகுபுணர்ந்து வள்ளி- அதாவது ஆண் பெண் உறவுக்கு அழைப்பது போல அழைக்கின்றான். ஆகவே இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் வள்ளி- முருகன் இடையில் ஏற்பட்ட காதலை அறிந்து இருந்தவர்கள் பால் உணர்வைப் பற்றி நன்கே அறிந்து இருந்தார்கள். அதை மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாக சொல்லவும், கவிஞர்களின் கவித் திறனுக்கு பொருள் தரவும் பயன் படுத்தி உள்ளார்கள். இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இந்தக் கதையைப் பற்றி தெரிந்து இருந்தாலும் சமிஸ்கிருத காவியங்கள் மற்றும் வடநாட்டில் இருந்த எந்த நூலிலும் வள்ளி பற்றிய செய்தி குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதே.

திருமுருகாற்றுப் படை

பல காலத்துக்குப் பிறகு எழுதப்பட்டுள்ள திருமுருகாற்றுப் படை என்ற நூல் மற்றவற்றை விட மாறுபட்ட நூலாகும். இது கவிநயம் மிக்க நூலாக மட்டும் அல்ல இலக்கியங்களில் முதன் முறையாக முருகனை கடவுள் எனத் துதிக்கும் வகையிலான நூலாகவே இருந்தது.

திருமுருகாற்றுப் படையில் வள்ளியை கபடமற்ற மலை வாழ் பெண்ணாகவே கூறி அவளுக்கு கொடி போன்ற இடை இருந்ததாகவும், அவளை சாந்தமான முகத்துடன் முருகன் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் எழுதப்பட்டு உள்ளது. திருமுருகாற்றுப் படையில் முதன் முறையாக சமிஸ்கிருத நூல்களில் கூறப்பட்டு உள்ள ஸ்கந்த முருகனைப் பற்றி மறைமுகமாக எழுதப்பட்டு உள்ளது. அதில் பிராமண குல வழக்கப்படி நடத்தப்படும் திருமணங்களைப் பற்றி கூறியப் பின் தேவசேனாவின் (தெய்வானையின்) கற்பைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. தேவசேனா செய்து கொண்ட திருமணம் வைதீக முறையிலான முறையில் அமைந்து இருக்க வள்ளியின் திருமணமோ ஆரியர்களின் காலத்துக்கு முற்பட்ட காதல் திருமணமாக, ஆச்சார, வைதீகமற்ற முறையில் நடந்த திருமணம் என்கின்றது. உண்மையில் வள்ளி- முருகன் இவருடையக் காதலும் திருமணத்துக்கு முன்னர் தோன்றிய காதலினால் இணைந்தவர்கள் என்றும் மிகப் புராதான காலத்தில் எழுதப்பட்டு உள்ள உண்மையானக் கதையின் நாயகர்கள் என்றும் நினைக்க வேண்டி உள்ளது.

http://murugan.org/tamil/zvelebil.htm




சேகுவேராவை கையில் எடுத்தார்
கலைஞரை தூக்கி எறிந்தார்,

பெரியாரை கையில் எடுத்தார்
சேகுவேராவை தூக்கி எறிந்தார்,

பிரபாகரனை கையில் எடுத்தார்
பெரியாரை தூக்கி எறிந்தார்,

பிரபாகரனை தூக்கி எறியத்தான்
இப்போது முருகனை தூக்கி பிடிக்கிறார் நடிகர்

தமிழர்களே இவரின் பரிணாம வளர்ச்சியை கவனியுங்கள்
தன் தேவைக்கு திராவிடத்தை பயன்படுத்தும் இவர்
நாளை பதவி கிடைக்கவில்லை என்றால்
தமிழர் அடையாளத்தையும் தூக்கி எறியத்
தயங்கமாட்டார் எச்சரிக்கை!!!.




திராவிடமா, தமிழ்த் தேசியமா? ஓர் அரிய செய்தி!

16.02.2015 அன்று நடைபெற்ற விவாதத்தில் பல செய்திகள் பரிமாறப் பட்டுள்ளன. தவறான செய்திகள் மக்களைச் சென்றடைந்து விடக் கூடாது என்னும் நோக்கில் கீழ்க்காணும் விளக்கம் தரப்படுகிறது.

தோழர் மணியரசன் தன் உரையில், "அயோத்திதாசரிடம் பின்னாளில் மாற்றம் வந்தது. சென்சஸ் கணக்கு எடுப்பின் போது, 'எங்களைச் சாதியற்ற தமிழர் என்று குறியுங்கள்' என்று மனுப் போட்டார். திராவிடர்ன்னு சொல்லலை" என்று குறிப்பிட்டுள்ளார்.

நண்பர் வாலாசா வல்லவன் அந்தச் செய்தியில் பிழை உள்ளது என்று உறுதிபடக் கூறினார். உடனே, ஞான அல்லோசியஸ் தொகுத்துள்ள அயோத்திதாசர் சிந்தனைகள் இரண்டு தொகுதிகளையும் மீண்டும் எடுத்துப் படித்தபோது,வல்லவன் சொல்லியதே சரி என்பது உறுதியானது. இறுதிவரையில் அவர் திராவிடர் என்னும் சொல்லையே மிகப் பலவிடங்களில் பயன்படுத்தியுள்ளார். மணியரசன் குறிப்பிடும் மனு, முதல் தொகுதியில் 307-08 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.அவ்வரிகள் அப்படியே கீழே தரப்படுகின்றன:

"இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்."

இம்மனு 1910 டிசம்பர் 14 அன்று எழுதபட்டுள்ளது. அயோத்திதாசரின் இறுதி ஆண்டுகளான 1913,14 ஆகியவற்றிலும் பல இடங்களில் அவர் திராவிடர் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். -

-சுப.வீரபாண்டியன்-




தமிழர் திருமணத்தில் தாலி உண்டா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஓர்அறிவிப்பு வெளி வந்தது; தாலியைக் குறித்து ஒட்டி வெட்டிப் பேசும் விவாதம் அது - அதனைக் கண்ணுற்ற இந்துத்துவா சக்திகள் ஆகா - இந்துக் கலாச்சாரத்துக்கு ஆபத்து! ஆபத்து!! இதனை அனுமதி யோம்! என்று ஆயிரம் கால் மிருகமாகக் கர்ச்சித்தனர். அந்த நிறுவனத்துக்குப் பல வகை களிலும் அழுத்தம் கொடுத்தனர் - ஒரு  கட்டத்தில் அச்சுறுத்தவும் செய்தனர்.

அதை ஒளிபரப்பி விடுவார்களோ என்ற எதிர்பார்ப்பில் கடந்த எட்டாம் தேதி புதிய தலைமுறை அலுவலகத்துக்குள்ளேயே தாக்குதல் தொடுத்துள்ளனர் - தடித்தனமாக - ஊடகவியலாளரான பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர்களின் அராஜகம் அடங்கிடவில்லை.

12.3.2015 வியாழன் அதிகாலை 3 மணியளவில் டிபன்பாக்ஸ் வெடி குண்டு களை புதிய தலைமுறை அலுவலகத்தில் வீசி எறிந்து தங்களின் வெறி உணர்வைத் தீர்த்துக் கொண்டனர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்து இளைஞர்சேனா என்ற அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர் எங்கள் அமைப்புதான் இதனைச் செய்தது; நாங்கள் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி மதுரை ஆறாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட் ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்ற காவலில் வரும் 19ஆம் தேதி வரை வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித் துள்ளது. மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார்கள் மற்றும் பிஜேபியினர் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்கள் - சொல்லுவார்கள்?

எங்களுக்கும் அந்த அமைப்புக்கும் சம்பந்தமேயில்லை என்ற துணியைப் போட்டுத் தாண்டுவார்கள்

காந்தியாரை நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்றபோதும் (30.1.1948) அப்படித்தான் சொன்னார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபையைச் சேர்ந்தவர் என்று சாதித் தார்கள்.

(ஆனால் அவரின் குடும்பத்தவர் களோ காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேவோ நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.தான்; அவனை ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று அத்வானி கூறுவது அசல் கோழைத்தனம் என்று சொன்னதை நேர்முக பேட்டி மூலம் இந்துக் குழுமத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் இதழ் அம்பலப்படுத்தவில்லையா?)

அதே வகையில் தான் புதிய தலைமுறை வன்முறைக்குத் தாங்கள் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப் பார்க்கிறார்கள்.

ஆனால், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவதுபோல பிஜேபியின் தேசியச் செயலாளர் எச். ராஜா என்பவர் தனது இணைய தளத்தின் மூலம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் வன் முறைக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.

தாலிபற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதத்திற்கு தேர்ந்தெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத் தக்க ஒன்றாகும். இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதால்தான் இவர்கள் இந்துமத பழக்க வழக்கங் களில் மட்டும் கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.

பெண்களுக்குத் தாலி தேவையா? இல்லையா? என்ற விவாதத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் - என்று பிஜேபியின் தேசிய செயலாளர் ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார் என்றால் இதன் உள்ளடக்கம் என்ன?

தாக்கியவர்களை எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை; மாறாக அவர்கள்மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய தலைமுறை மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக் கிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறையில் இருப்பவர்களைச் சந்தித்துள் ளீர்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் என்ன சொன்னார்? சிறையில் இருக்கும் எங்கள் தோழர்களைத் தானே பார்த்தோம் என்று, சொன்னதன் மூலம் புதிய தலைமுறை தாக்கப்பட்டதற்குப் பின்னணி யில் இருந்தவர்கள் இந்தக் கம்பெனிதான் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. (காவல்துறை என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்!)

இந்துத்துவாவாதிகள் இதில் தலையிடு வதற்கு என்ன இருக்கிறது? தமிழர்களுக்கும் இந்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்களே - சட்ட ரீதியான தில்லுமுல்லுகளால் அப்படி ஒரு சூழலை உருவாக்கி இருக்கலாம்; ஆனால் பண்பாட்டு ரீதியாக இந்துவுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ்க் கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என்று போற்றப்படும் கா. சுப்பிரமணியம்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்கள் தமிழர்கள் இந்து அல்லவென்றும் சைவம் வேறு இந்து வேறு என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெட்டி வீழ்த்திவிட வில்லையா?

இந்த நிலையில் இந்து மதக் கலாச்சாரத்தை தமிழர்கள்மீது திணிக்க இவர்கள் யார்? நியாயப்படி இவர்கள் மேற்கொள்ளும் இதே அணுகுமுறையை பார்ப்பனர்களால் தமிழர்கள்மீது திணிக்கப் படும் சடங்குகளின்மீது தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளலாமா?

தமிழன் கட்டிய கோயிலில் கருவறைக் குள் புகுந்து நாங்கள் மட்டும்தான் அர்ச்சனை செயயலாம்; நீ சூத்திரன் வெளியில் நில்லு! என்று பார்ப்பனர்கள் கூறும் கோயிலுக்குள் புகுந்து தமிழர்கள் இதே வேலையைச் செய்தால் என்னாவது?

தமிழ்நாட்டுக் கோயிலுக்குள் வழிபாட்டு முறை தமிழில் அல்லாமல் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து நாமும் கோயிலுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட லாமா? (ஆனால் அந்த வன்முறைகளில் நமக்கு நம்பிக்கை இல்லாததால் அறிவு வழியாக அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்).

தமிழர்களுக்குத் தாலி கிடையாது என்று அறிஞர் டாக்டர் இரா. இராசமாணிக்கனார் தனி நூலே எழுதியுள்ளார் (தமிழர் திருமணத்தில் தாலி - என்பது அந்நூலின் பெயர்)

தமிழர் திருமணம் தொடர்பாக அகநானூற்றில் (பாடல் எண் 86, 136) இரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் தாலி என்ற பேச்சுக்கே இடமில்லையே! அப்படி இருக்கும் பொழுது தமிழர்களுக்குத் தொடர்பே இல்லாத தாலியைப்பற்றி தமிழர்கள் விவாதம் நடத்தக் கூடாதா? இடையில் புகுத்தப்பட்டது குறித்து கருத்துத் தெரிவிக்கக் கூடாதா?

அப்படியே பார்த்தாலும் தாலி என்ற சொல்லுக்குப் பனை ஓலை - தொங்க விடுவது என்றுதான் பொருள். இப்பொழுது தாலியை இவ்வாறு தான் பயன்படுத்து கிறார்களா?

தங்கத்தினால்  செய்து அல்லவா தொங்க விடுகிறார்கள். கழுத்தை உறுத்தும் என்பதற்காக இரவில் கழற்றி வைத்து விடுவதில்லையா? அப்பொழுது மட்டும் ஆச்சாரம் கெடாதா? ஏழைகள் அவசரத் துக்குத் தாலியை அடகு வைக்கிறார்களே- இந்துத்துவாவாதிகள் அடகுக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் செய்வார்களோ!

தாலியிலும்கூட ஆரியம் ஜாதியைத் திணித்துள்ளதே! பறத்தாலி, பாப்பாரத் தாலி, பொட்டுத் தாலி, பிறைத்தாலி, சிலுவைத் தாலி என்று பிரித்து வைத்துள்ளார்களே! புலித்தாலி என்றால் காட்டுக்குச் சென்று புலியோடு சண்டை போட்டு புலியின் பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் தாலியாகக் கட்ட வேண்டுமாம்! எத்தனைப் பேர் தயார்! ராம கோபாலன் கம்பெனிகள் முன் வரட்டுமே!

தந்தை பெரியார் அவர்களால் 1928 முதல்  (மே - 28) அறிமுகப்படுத்தப்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போது சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடி யாக்கும் சட்டத்தைச் செய்வித்தாரே- (20.1.1968 - குடியரசு தலைவர் ஒப்புதல்) அந்தத் திருமண சட்டத்தில் தாலியைக் கட்டாயமாக்கவில்லையே! மாலை அணிவித்தாலோ, மோதிரம் மாற்றிக் கொண் டாலோ போதும் என்று கூறப்பட்டுள்ளதே!

ஆயிரக்கணக்கான பெண்கள் அக்கொள்கையை ஏற்று தாலி கட்டாமல் திருமணங்களைச் செய்து கொண்டு வருகிறார்களே - ஏற்கெனவே ஏதோ ஒரு சூழ்நிலையில் தாலி கட்ட நேர்ந்த நிலையில், திராவிடர் கழக மேடைகளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறதே - இப்பொழுதுகூட புதிய தலைமுறை ஒளிபரப்புப் பிரச் சினையில் எந்தஒரு தமிழ்நாட்டுப் பெண்ணும் எதிர்ப்புக் குரல் கொடுக்க வில்லையே! இந்த இந்து வெறி ஆண்கள் தானே குதியாட்டம் போடுகிறார்கள்.

ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட தற்கு அடையாளம்தான் தாலி என்றால், ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டதற்கு என்ன அடையாளம்? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன பதில்? பார்ப்பனர்கள் நடத்தி வைக்கும் சூத்திரர்கள் வீட்டுத் திருமணத்தில் ஒரு சடங்கை மறக்காமல் செய்வார்கள்.

மணமகன் சூத்திரன் என்பதால், அவனுக்கு மந்திரங்கள் ஓதப்படக் கூடாது என்ற அவாளின் சாத்திர முறையால் மணமகனுக்குப் பூணூல் அணிவிப்பார்கள் கல்யாண சடங்குகள் முடிந்த நிலையில் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பையில் தூக்கி எறிந்து விடுவர்; பூணூல் மட்டும் தற்காலிகம்; தாலி மட்டும் நிரந்தரமா? எது பார்ப்பனர்களின் உயர் ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ, அதனைக் கட்டிக் காப்பதுதான் அவாளின் திடச்சித்தம்!

ஊடகங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை மதவாதத்தின் ஆபத்தைப் புரிந்து கொண்டு அதன் ஆணி வேரை வீழ்த்தும் பணி என்பது எத்தகைய முக்கியமானது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை  தயாரிக்க வேண்டும் ஒளிபரப்ப வேண்டும்.

அதை விட்டு விட்டு எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்ற பெயரால் மசாலா கலவை நிகழ்ச்சிகளை நடத்திச் சென்றால் இந்த அடிப்படைவாதிகளின் கொம்புகள் மேலும் கூர்மை அடையத்தான் செய்யும் - எச்சரிக்கை! தனக்கு வந்தால்தான் தலைவலியும் திருகுவலியும் என்ற மனப்பான்மை கூடாது!

பிஜேபி, சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஊடகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனராம். இந்தச் சந்தர்ப்பத்தை ஊடகத் துறையினர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் குப்பைத் தொட்டிகளை வெளியே நிறுத்தி விடும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றே மகிழ வேண்டும்.

அதே நேரத்தில் சென்னையில் ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் இந்தப் பிஜேபி மதவாத சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் ஒரு பிரபலமான புகழ் பெற்ற ஊடகலியலாளர் ஒதுக்கி வைக்கப்பட்டாரே! தலைவர்கள் கண்டித்து அறிக்கை விடுத்தும் நிருவாகம் யாருக்குப் பணிந்தது என்பது எல்லோருக்கும் தெரியுமே! அந்தத் தைரியம் தான் இப்பொழுதும்.

ஏதோ புதிய தலைமுறைக்கு வந்தது என்று நினையாமல் (அது ஒரு குறியீடுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் கூறியுள்ளார் இந்தக் கருத்தை) மற்ற நிறுவனங்களிலிருந்தும் பாசிசக்  குப்பைகளை வெளியே வீசுவது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லதே!

............

போப் முதல் புதிய தலைமுறை வரை

கருத்துச்சுதந்தரம் என்பதைக் கடுகளவும் அனுமதிக்காக குணம் பாசிசத்தில் பிரதானமானது. இங்கு இருக்கும் ஒரே கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் மட்டுமே - என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தின் முடிந்த முடிவு.

அதற்கு மாறாக இன்னொரு கலாச்சாரம் என்பதுபற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படி யாரேனும் அத்தகையப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவார்களேயானால் தசைப்பலத்தால் விநீறீமீ றிஷீஷ்மீக்ஷீ அவர்களை எலும்பு, சதை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.

சிவசேனை - பா.ஜ.க.கூட்டணி ஆட்சியில் மும்பை நகரப் பகுதிக்குள் யார் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் அவர்கள் முன்கூட்டியே பால்தாக்கரேயின் மகன் உத்கர்தாக்கரே குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிகழ்ச்சிகள் தூள் தூள்தான்! அதுபோல, எத்தனையோ நிகழ்வுகள் நடந்ததுண்டு.

1998 டிசம்பர் 2-இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3-இல் டில்லியிலும் தீபாமேத்தாவின் ஃபயர் திரைப்படத்திற்கு எதிராக சிவசேனையினர், சங்பரிவாரத்தினர் பெரும் இரகளையில் ஈடுபட்டனர். சுவரொட்டிகள் தீயிடப் பட்டன. திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன!

1998 ஏப்ரல் 26 ஆம் நாளன்று சிவசேனைக் காலிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான குலாம் அலி நிகழ்த்த இருந்த இசை நிகழ்ச்சி அரங்கினுள் நுழைந்து துவம்சம் செய்தார்கள்.

1996 மே திங்களில் மும்பையில் இர்ஃபான் ஹூசேனி ஓவிய அரங்கு தீக்கிரையாக்கப் பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் இந்து மதக்கடவுளச்சியான சரஸ்வதியை ஆபாசமாக வரைந்திருந்தாராம் - அதுதான் காரணமாம்.

கோபிகாஸ்திரீகளை நிர்வாணப்படுத்தி ரசித்த கோகுல கிருஷ்ணனை கடவுளாகக் கும்பிடும் இந்த கூட்டத்துக்கு இதுபோலெல்லாம் சிந்திப்பதற்கே முதலில் அருகதை கிடையாதே! ஓவியர் ஹூசேன் ஓவியங்கள் அழிக்கப்பட்டபோது சிவசேனையின் தலைவர் பால்தாக்கரே என்ன கூறினார்?

ஹூசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று ஆணவத்துடன் கேட்டார் அந்த ஆரியப் பிதாமகர்!

1999 செப்டம்பர் 23 உ.பி.தலைநகரான லக்னோவில் நாடகத்தை நடத்திவிட்டு, சஹ்மத் ரங்க்மஞ்ச் நாடகக்குழு திரும்பிக்கொண்டிருந்த போது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழிமறித்துத் தாக்கி கலைஞர்களைப் படுகாயப்படுத்தியது.

உ.பி.மாநில பிஜேபி மேலவை உறுப்பினரான (எம்.எல்.சி) அஜீத் சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக்காவிக் கொலைவெறிக்கும்பல் தாக்குதலைத் தொடுத்தது.

1999 மே நாளன்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூர் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம்.நாகராஜ் தலைமையில் காவிக் கும்பலால் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.

1999 நவம்பரில் இந்தியாவிற்கு வந்த உலகக் கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான இரண்டாவது ஜான்பால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார்?

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் - பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி 1999 ஜூலை 13 ஆம் நாள் டில்லியில் லி-மெரிடின் ஓட்டலுக்கு முன் சிவசேனையினர் திலீப்குமாரின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆட்டம் போட்டனர்.

இவ்வளவுக்கும் வாஜ்பேயி, அத்வானி ஆகியோரின் ஆசிர்வாதம் அனுமதியுடன் தான் அந்த விருதை திலீப்குமார் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகாரங்களைக் கையில் வைத்துக்கொண்டிருந்த அந்த பெரிய மனிதர்கள் இந்தியத் தலைநகரிலே நடைபெற்ற இந்த கேடுகெட்ட செயலைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை - என்ன வெட்கக்கேடு!

அவுட்லுக் இதழின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹூசேன். வகுப்புவாத வெறித்தனங்களை தமக்கே உரித்தான நுட்பத்தோடு கார்ட்டூன் மூலம் தோலுரித்துக் காட்டக்கூடியவர் - பொறுக்குமா காட்டு மனிதர்களுக்கு?

குரூரமான முறையில் அந்த மாபெரும் ஓவியனைக் கொலை செய்து சாக்குப்பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டி விட்டுவிட்டனர். பாகிஸ்தான் இந்தியாவோடு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்பதற்காக ஆடு களத்தைச் சேதப்படுத்தியவர்கள் யார்?
ஏன் வெளியில் போவானேன்? சென்னையில் பாரதியார் நினைவிடத்தில் என்ன நடந்தது?

1998 செப்டம்பர் 13 அன்று சென்னை- திருவல்லிக்கேணியில் உள்ள கவிஞன் பாரதி நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழா நடத்தப்பட்டபொழுது இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்த கவிஞர்களைத் தாக்கி தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறியவில்லையா?

பாசிசத்தின் தகப்பன் முசோலினி இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த இந்துத்துவா கூட்டத்திடம் பிச்சையல்லவா வாங்கி இருப்பான்!
வந்தே மாதரம் பாடல் உ.பி.அரசால் கட்டாயப்படுத்தப்பட்டது. சரஸ்வதி வந்தனாவும் அங்குக் கட்டாயம். இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அபுல் ஹசன் அலி நத்வி அந்தப் பாடல்கள் பாடப்படும் பள்ளிகளுக்கு இஸ்லாமியப் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறினார்.

அதன் தொடர்ச்சியாக என்ன நடந்தது? அந்த மார்க்க அறிஞன் வீட்டில் திடுதிப்பென்று நுழைந்து உ.பி.மாநிலக் காவல் துறை சோதனையிட்டு அவமானப்படுத்தியது (23.11.1998)

மற்ற மற்ற இடங்களில் நடந்ததெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் ரவுடிசம் என்றால் இங்கு ஒரு அரசே தன் கருத்துக்கு ஆகாதாவர்களை அச்சுறுத்துவது என்னும் பாசிச முறையைக் கையாண்டது!

தீபாமேத்தாவின் வாட்டர் திரைப்படப் படப்பிடிப்பின் கெதி என்ன என்று யாருக்குத் தெரியாது? அரசு அனுமதி பெற்றிருந்தும் ஒரு செயல் தடை செய்யப்படுகிறது என்றால், அரசுக்கும் மிஞ்சிய அராஜகக்கும்பல் ஒன்று இங்கு ஆட்டம் போடுகிறது, அதன் கட்டுப்பாட்டில் அரசும் இருக்கிறது என்றுதானே பொருள்?

புதிய தலைமுறை தாக்கப்பட்டதும் இந்த தொடர்ச்சியில் தான்.



பிசிசிஐ { brahmin of Control for Cricket in India } என்ற தனியார் மட்டைப்பந்து அணிதான் 1920 முதல்
இன்றுவரை இந்திய அணிக்காக விளையாடி வருகின்றது

இந்திய அரசால் 41 ஆண்டுகளில்
ஒரு 15 பேர் கொண்ட அணியை உருவாக முடியாத நிலையை
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் அதிகார பலத்தால் இந்திய அரசுக்கு வாய்ப் பூட்டு சட்டம் போட்டிருக்கிறார்கள்

ஒரு வேலை இந்திய அரசு தனியாக ஒரு அணியை உருவாக்கினால் அதில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற நேரிடும் என்ற பயமே பார்ப்பனர்களுக்கு உள்ளது

அதற்க்காகதான் இப்போது நாம் தனியார் துறைகளிளும்
இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறோம்.

ஆரியப் பார்ப்பன சூழ்ச்சியால் தன் மரபு வழி விளையாட்டான சடுகுடுவை{கபடி}  மறந்த  தமிழன்
வீடு முதல் வீதி வரை மட்டைப்பந்து என்ற கிரிகெட்டை பிடித்து தொங்கிக்கொண்டுள்ளான்

கிரிகெட்டை நேசிக்கும் தமிழனுக்கு அதன் சூழ்ச்சி தெரியாது,
எப்படி கடவுளை வணங்க கோயில் செல்லும் தமிழனுக்கு கருவறையில் நுழைய தடையோ அப்படிதான் இங்கேயும்
தமிழன் வேடிக்கை மட்டுதான் பார்க்கவேண்டும் உள்ளே போய் விளையாட முடியாது

கடவுளை வணங்கும் தமிழனுக்கு  கடவுளை அர்ச்சனை செய்யும் உரிமையை கடவுள் மறுப்பாளர்கள் எப்படி போராடி பெற்றுத்தருகிறார்களோ

அப்படிதான் மட்டைப்பந்து {கிரிக்கெட்} விளையாட்டை விரும்பாத
நாங்கள் அதை பார்க்கும் நேசிக்கும் சகதமிழனுக்கு தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்று போராடுகிறோம்.

ஆரிய சூழ்ச்சிக்கு எதிராக அணி திரள்வீர்!!

-செல்வேந்திரன் கு-



புனித வெள்ளியில் சிலுவையில் அரையப்பட்ட ஏசு

மூன்று நாள் கழித்து உயிர்பெற்றார்.

கொடுறமாக  சித்தரவதை செய்து கொல்லப்பட்ட போது
மீண்டும் உயிர் பெற்ற ஏசு கிருத்து மீண்டும் காணாமல் போனது ஏன்...?

ஏன் இன்றும் அவரால் வர முடியவில்லை...?
"""இருந்தால்தானே வருவதற்க்கு"""