வியாழன், 25 ஜூன், 2015

இந்து மதத்தில் சில ஏன் எதற்காக...?

இப்படி ஒரு புத்தகத்தை "ஆர்.பி.வி.மணியன்" என்பவர் எழுதி விஜயபாரதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன் என்ற தலைப்பில்
இந்துக்கள் ஏன் நெற்றியில் மதக் குறியீடான அடையாளங்களை வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார்

சொல்கிறவர் அந்த குறியீட்டு பின்னனி கதைகளை
சொல்லியிருப்பார் என்று ஆவளோடு பக்கத்தை புரட்டி போட்டேன்
வழக்கம் போல காவிகள் எப்படி திசை திருப்புவார்களோ அப்படியே
நேராக இவர் வெள்ளையர்களை வைத்தே தொடங்குகிறார்.

நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஏன்...?
பக்கம் 11

"""""""""""சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்றிக்கு இட்டுக் கொள்வது
சிலருக்கு அநாகரீகமாகப் பட்டது.

ஆங்கிலேயர்கள் நம்மவர்கள் திருநீறு, திருமண் இட்டுக் கொள்வதை
{Caste Mark ஜாதி அடையாளம்} என்று கெட்டப் பெயர் தந்து தூக்கில் போடப் பார்த்தார்கள்.

வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே திருமண் இட்டுக் கொள்கிறவர்களிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள்

ஆகவே நாம் நெற்றிக்கு இட்டுக் கொள்வது "Caste Mark" அல்ல; மாறாக "Religious Mark"{சமய சின்னம்} ஆகும்.""""""""""""""

இந்த ஆர்.பி.வி.மணியன் என்பவர்தான் இந்த பக்கதில்
இந்த இட்டுக் கொள்வது ஜாதி அடையாளம் இல்லை அது வெள்ளையன் சூட்டுய பெயர் என்றார் அவரே இதே புத்தகத்தில்
பக்கம் 98ல் வடகலை தென்கலையினர் ஏன் நாமம் போடுகின்றனர் என்று சொல்கிறார் இங்கே இது #ஜாதிஅடையாளம் இல்லை என்கிறார்
அங்கே வடகலை,தென்கலையினர் குறியீட்டை பேசுகின்றார்
இங்கே ''''''வாஸ்தவத்திலோ விபூதி பூசுகிறவர்களில் ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர்''''''' என்று பேசுகிறவர் அங்கே இவர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று சொல்லமறுக்கிறார்.

1918 -19 ல் ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா என்று
நாமம் போடுவதில் ஒரு கலவரமே நடந்து அது நீதி மன்றம் வரை சென்றது உலகறிந்த செய்தி அந்த செய்தி இவர் படித்திருப்பார இல்லை தெரிந்து அந்த இழிவான காரியத்தை மறைத்திருப்பாரா...?

வடகலையினர் தென்கலையினரை பார்த்தால்
சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டும் என்று முட்டிக்கொண்டதெல்லாம் இந்து மத ஜாதி தீண்டாமை என்பதை மணியன் அறிந்தே தவிற்த்து இருக்கிறார்

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்
விபூதி பூசுவோர்களில்  ப்ராணரிலிந்து So Called தீண்டாதார் வரை சகல ஜாதியாரும் உள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்
தீண்டாமை எங்கே தொடங்குகிறது என்று கவனித்தீர்கள் என்றால் புரியும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று சொல்வார் இதற்கு சான்றுதான்
இந்த "So Called தீண்டாதார் "

இதுதான் புனிதமான இந்து மதத்தின் நிலை
மானமுள்ள தமிழன் நெற்றியில் பொட்டு வைப்பானா...?

"புத்தகம் பற்றிய விமர்ச்சனம் தொடரும்"


வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். 
பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். 
அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில்

அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர்.
இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்.இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார்.

- தந்தை பெரியார்(விடுதலை-07.06.1964)

புதன், 24 ஜூன், 2015

தாழ்த்தப்பட்டவர் முதல்வர் ஆக முடியுமா!!

பறை பல்லு பட்டம் போகாமல் உன் சூத்திர பட்டம்
போகாது என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் மூத்திர சட்டியோடு சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி
படித்து பட்டம் பெற்று தனக்கென வாழாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் கடைசி வரை பாடுபட்டது இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அதை யாராலும் மறுக்க முடியாது.

அண்டி பிழைக்க வந்த கூட்டம் மதம் என்னும் அபினை மக்களுக்கு கொடுத்து கடவுள் என்னும் பொம்மையை விளையாட கொடுத்து
அடிமைகளை அடையாளம் காண அவர்களுக்கு மத குறியீடிட்டு
தோலுக்கு ஒரு வர்ணத்தை சொல்லி ஊருக்கு ஒரு ஜாதி அடையாளம் கொடுத்து மொத்தமாக நாம் இந்துகள் என்று சொன்னான்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தாலும்
ஒவ்வொரு வர்ணத்திற்க்கு ஏற்றப் பெயர்தான் வைக்க வேண்டும் என்கிறது
இந்து மநுதர்மம்.

பெற்ற குழந்தைக்கு ஐந்து வயது ஆனால் பள்ளியில்
சேர்க்க நினைத்தால் குலத்தொழிலை கற்றுக்கொடு என்கிறது இந்து மத
மநுதர்மம். மீறி படிக்க வைத்தால் நாக்கை அறு காதால் கேட்டால்
“காதில் ஈயத்தை காயிச்சி ஊற்று” என்கிறது இந்து மத மநுதர்மம்
ஆரியப் பார்ப்பானுக்கு பணிவிடை செய்வதே இம் மண்ணின் மைந்தர்களின் பணி என்கிறது இந்து மத மநுதர்மம்.

இந்த மண்ணில் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு அதிகார பதவிக்கு
போவதென்றால் அதற்க்காக பெரும் போராட்டத்தையும் உயிர் பலியையும் கொடுத்தே அந்த அதிகாரத்தை நாம் அடைய முடிகிறது, இன்றைக்கும்
சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒரு சிலர் அடக்க நினைத்தால்
அப்போது ஏற்ப்படும் அச்சம் வண்கொடுமை சட்டம் உள்ளது அது நம்மை
தண்டிக்கும் என்ற பயவுணர்வு உள்ளதாலேயே சில குற்றங்கள் இந்த சட்டத்தால்
குறைந்திருக்கின்றது.

ஆண்டாண்டு காலமாக கடும் போராட்டத்தை நடத்திதான் பெற்றோம் இந்த உரிமைகளை தோல் சீலை போராட்டம்,கோயில் நுழைவு போராட்டம்,இந்திய சட்ட எரிப்பு போராட்டம்,சாஸ்திரம் எரிப்பு போராட்டம், என பல போராட்டங்களை செய்து ரோட்டில் நடமாட ஆரம்பித்தோம்.

கையில் இருந்த செருப்பு காலில் போட்டு நடந்தோம்
கக்கத்தில் இருந்த துண்டை தோலில் போட்டு நடந்தோம்
நுழையவே முடியாத கோயிலில் தன் பிள்ளைகள் பெயரில்
அர்ச்சனை செய்தோம்
நாடக கொட்டைகையில் “பஞ்சமனுக்கு இடமில்லை” என்ற நுழைவு சீட்டு இருந்த
நாட்டில் நாடக மேடையே திராவிடன் கையில் வந்தது குளிர்சாதன வசதிகளோடு
இன்று நாடகத்தை பார்த்து ரசிக்கின்றோம்.

இப்படி பல நிலைகள் இந்த மண்ணில் தோற்றிவித்து தோற்க்கடிக்கப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தை கொண்டுவந்து ஒரு மகத்தான திராவிடர் நூற்றாண்டை கடந்துவிட்டோம் ஆயினும் நாம் நம் நிலையை இன்னும் வேகபடுத்த வேண்டும் எந்த தமிழனை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னார்களோ அவர்களை போராடி போராடி அரசு அதிகாரத்தில் அமர்த்திவிட்டோம். இனி
ஆட்சி அதிகாரம் ஒன்று இருக்கிறது அதை நாம் கையில் எடுக்க வேண்டும்
1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.
ஏற்க்கனவே “தனி தொகுதி” “தனி ஓட்டுரிமை” என்று புரட்சியாளர் அம்பேத்கர் முன் வைத்த கோரிக்கையை காந்தியின் “வஞ்சகத்தால் துரோகத்தால்“ அவை நிறைவேறாமல் போனது ஒரு காந்தியின் உயிரை விட ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் பெரிது என்று அப்போது அண்ணல் அம்பேத்கருக்கு தந்தி அனுப்பி அறிவுரை கூறிய
“அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின்” அந்த வார்த்தைகள் அளப்பறியாதது
அதன் நோக்கம் வியத்தகு மாபெரும் போராட்ட வடிவம் இந்த நாட்டின் மகாத்மா என்று போற்றக்கூடிய ஒரு தலைவரையே வேண்டாம் தாழ்த்தப்பட்ட மக்களின் “உயிரை” நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எந்த “தலைவரும்” சிந்திக்காத சிந்தனையை ஈரோட்டு மூலையில் உதிர்த்துள்ளது அவர் விட்டுச் சென்ற அந்த பணியைதான் நாம் இன்று போராட்ட வடிவில் எடுத்துச் செல்லவேண்டும்


தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அதிகாரியாக வரவேண்டும் என்றால்
அதற்க்காக இடஒடுகீடும் அரசின் ஆணையும் தேவை. இப்படி வந்தால் மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் இடைநிலை ஜாதியினரோ ஆதிக்க ஜாதியினரோ ஆரியப் பார்ப்பனியமோ அவர்களை நேரடியாக இவர்கள்தான் எங்களுக்கு அதிகாரியாக வரவேண்டும் என்று கேட்பதில்லை இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஆரியப் பார்ப்பனியர்கள் 1938ல் கும்பகோணம் நகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டார்கள் அதில் எங்கள் அக்ரஹாரத்தில் “மலம்” அல்ல தாழ்த்தப்பட்டவர்கள் வர கூடாது என்றும் அதற்கு பதிலாக இடைநிலை ஜாதியினர்தான் வரவேண்டும் என்று
தங்களுடைய ஜாதி தீண்டாமையை அரசு தீர்மானமாக போட்டு தங்கள் ஜாதிவெறியை உறுதிபடுத்திக்கொண்டார்கள்
நாம் இந்த மக்களிடமா ஒரு தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்க கோரிக்கை வைக்க முடியும்…?
மநுதர்ம அதிகாரத்தை கையில் வைத்து நம்மை தீண்டத்தகாதவன் என்று கொள்கிறானோ அது போல அரசு அதிகாரத்தில் நமக்கென்று உரிமையை பெற்று அந்த ஆதிக்க பார்ப்பனிய ஜாதிவெறி கூட்டத்தை ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆளவேண்டும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

தமிழகத்தில் “தனி” தொகுதிகள் 46 உள்ளது இதில் தாழ்த்தப்பட்டவர்கள்தான் சில இடத்தில் மலைவாழ் மக்கள்தான் போட்டியிட முடியும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதே மக்கள் முதல்வராக முடியுமா என்றால் முடியாது வெறும் 46 தொகுதிகளை வைத்து அதிகாரத்தை பிடிக்க முடியாது ஆனால் ஆட்சியில்
“சுய உரிமை” கேட்கலாம்!!! 46 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்ப்பாளர்களில் ஒருவருக்கு ஆட்சி அமைக்க போகிற அய்ந்தாண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள்
தாழ்த்தப்பட்டவர்தான் முதல்வராக இருக்க சட்டம் இயற்றவேண்டும் அப்படி சட்டம் இயற்றினால் மட்டுமே ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக முடியும்.

-செல்வேந்திரன் கு-
24/06/2015.